மார்க்கெட்டை பிடிக்க நிஜ வாழ்க்கையில் நடிக்கும் இஞ்சி இடுப்பழகி
Recommended Video

சென்னை: இஞ்சி இடுப்பழகி நடிகை பாலிவுட்டில் மார்க்கெட் போய்விட்டது என்பதை வெளியே சொல்லாமல் செமயாக சமாளிக்கிறார்.
டோலிவுட்டில் கொடி கெட்டிப் பறந்தவர் அந்த இஞ்சி இடுப்பழகி நடிகை. அவர் இடுப்புக்காகவே பேசப்பட்டவர். கோடிகளில் சம்பளம் வாங்கியவர் ஒரு நாள் பாலிவுட்டில் போய் செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பிறகு தன்னை வளர்த்து விட்ட டோலிவுட்டை மறந்துவிட்டார்.

பாலிவுட்
பாலிவுட்டில் அம்மணிக்கு மவுசு இல்லை. போராடி போராடிப் பார்த்த அவர் நைசாக டோலிவுட்டுக்கு தூதுவிட்டார். முதலில் குத்தாட்டம் போட அழைத்தவர்கள் பின்னர் அவரை ஹீரோயினாக்கிவிட்டார்கள். அவரும் சந்தோஷமாக வந்து ஹீரோயினாக நடித்தார். அதுவும் பெரிய தொகையை வாங்கிக் கொண்டு தான்.

விமர்சனம்
அம்மணி பாலிவுட்டில் இருந்த காலத்தில் டோலிவுட்காரர்கள் எவ்வளவோ அழைத்தும் கண்டுகொள்ளவே இல்லையாம். தற்போது அங்கு மார்க்கெட் இல்லை என்றதும் டோலிவுட்டுக்கு வந்துவிட்டார். இந்தி படங்களில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் தெலுங்கு படங்களில் நடிக்க நேரம் இல்லை என்று அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

கிண்டல்
இத்தனை ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு இஞ்சி இடுப்பழகி நடிகை கூறியுள்ள காரணத்தை கேட்டு பலரும் சிரிக்கிறார்கள். மார்க்கெட் இல்லை என்றால் எப்படி எல்லாம் இறங்கி வந்து ஐஸ் வைக்கிறார் என்று விமர்சிக்கிறார்கள்.

நடிகை
டோலிவுட் வட்டாரத்தில் தன்னை கலாய்ப்பதை தெரிந்து கொண்ட நடிகை அது தெரிந்தும் தெரியாதது போன்று நடிக்கிறாராம். இதற்கெல்லாம் கோபப்பட்டால் கெரியர் நாசமாகிவிடும் என்று அவர் பயப்படுகிறாராம்.


Click it and Unblock the Notifications











