twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. போட்டோ லீக்கானதுதான் மிச்சம்.. புலம்பும் இளம் நடிகை.. என்ன நடந்தது?

    |

    சென்னை: தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் கூட தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இளம் நடிகை புலம்பி வருகிறார்.

    தமிழில் சில வருடங்களுக்கு முன் ஹிட் படம் ஒன்றில் அறிமுகம் ஆனவர் அந்த நடிகை. படம் நன்றாக ஓடியது, வரவேற்பையும் பெற்றது . ஆனால் அந்த படத்தின் நடிகைக்கு மட்டும் அதன்பின் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

    அவர் நன்றாக வருவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் போக போக அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீங்க ரொம்ப குடும்ப பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று கூறி அவருக்கு நிறைய வாய்ப்புகள் பறிபோனது.

    2019ல் யார் சிறந்த சினிமா இயக்குநர்.. உங்கள் கருத்தை பதிவு செய்ய ஒரு வாய்ப்பு!

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    கிட்டத்தட்ட 2 வருடம் அவர் எந்த விதமான வாய்ப்புகளும் பெறாமல் இருந்தார். 2 வருடங்களாக அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

    என்ன போட்டோ

    என்ன போட்டோ

    இதனால் சில வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் புலம்பி வந்த அந்த நடிகை, சில வாரங்களுக்கு முன் இணையத்தில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டார். மாறி மாறி சேலை கட்டி, கருப்பு வெள்ளை தொடங்கி கலர் புல் வரை இவர் வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் இணையம் முழுக்க வைரல்.

    பெரிய வைரல்

    பெரிய வைரல்

    கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை அவர் இணையத்தில் வெளியிட்டார். அதிலும் இவர் இடுப்பு மடிப்பில் சிக்கி பல இளைஞர்கள் சின்னாபின்னமானார்கள். இந்த நிலையில் அவர் வெளியிடாத புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலானது. மேலாடை இல்லாத அந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலானது. இதை வேறு ஒரு ஐடி இணையத்தில் வெளியிட்டது. இதுதான் சர்ச்சைக்கு காரணம்.

    பலர் கேள்வி

    பலர் கேள்வி

    இந்த புகைப்படத்தை பார்த்து பலர் மோசமாக கேள்வி கேட்க தொடங்கினார்கள். அந்த நடிகையை மோசமாக விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். என்ன மேடம் நீங்க இப்படி போட்டோ போட்டு இருக்கீங்க என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். நீங்க இப்படி செய்ய கூடாது. உங்க மேல நிறைய மரியாதை வச்சு இருந்தோம் என்று அவர்கள் டிவிட் செய்து கேள்வி கேட்டனர்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இதுவும் கூட தனக்கு நல்லதுதான். எப்படியாவது பட வாய்ப்பு வந்தால் ஓகே. யாராவது வாய்ப்பு கொடுத்தால் நல்லது என்று இவரும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்.அவருக்கு இதனால் நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்கியது. வரிசையாக நிறைய இயக்குனர்கள் நல்ல கதைகளுடன் இவரை அணுகினார்கள்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அதிலும் முன்னணி இயக்குனர்கள் சிலர் இவரது கால் சீட் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் இத்தனை நடந்தும் இவர் இன்னும் எந்த படத்திலும் நடிக்க தொடங்கவில்லை. இன்னும் ஷூட்டிங் செல்லவில்லை. இவரை அணுகிய இயக்குனர்கள் யாருமே இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையாம்.

    என்ன கோபம்

    என்ன கோபம்

    இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட அந்த நடிகை தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். சமையல் நிகழ்ச்சியில் முன்னாள் நடிகை, நடிகர்களுடன் இவரும் ஒரு நபராக தற்போது நடித்து வருகிறார்.

    மிகவும் வருத்தம்

    மிகவும் வருத்தம்

    இவ்வளவு புகைப்படம் போட்டு, கவர்ச்சியான புகைப்படங்கள் லீக் ஆன பின்பும் கூட சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியில் இப்படி தொலைக்காட்சியில் சமையல் செய்யும் நிலைக்கு வந்துவிட்டோமே என்று இவர் புலம்பி வருகிறாராம்.

    English summary
    An actress gets sad after she could not get any chance even after her photo goes viral in Social Media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X