படங்களில் நடிக்க கணவர் தடை போட்டதை உளறிய நடிகை
பெங்களூர்: கணவரால் படங்களில் நடிப்பதை நிறுத்தியதை நடிகை உளறிவிட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. அவருக்கும் பிரபல ஹீரோ ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிகை படங்களில் இருந்து சில காலம் ஒதுங்கியே இருந்தார். இது குறித்து நடிகை தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

மாடலிங்
கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்தேன், பின்னர் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். ஆனால் கணவருக்காக இதை எல்லாம் விட்டுவிடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை என்கிறார் நடிகை.

குடும்பம்
என் கணவரை விட்டு தள்ளி இருப்பது எளிது அல்ல. நான் காதலிக்கத் துவங்கியபோது அவருடனேயே இருக்க விரும்பினேன். ஆனால் பட வேலைகளால் எப்பொழுதும் அருகில் இருக்க முடியவில்லை. திருமணமான பிறகு நடிப்பை நிறுத்த யோசிக்கக் கூட இல்லை என நடிகை தெரிவித்துள்ளார்.

சினிமா
எனக்கு கணவர் தான் முக்கியம். கணவர், குழந்தைகளை அடுத்தே என் கெரியர். அதனால் அவரை திருமணம் செய்தபோது கெரியரை விட்டதில் வருத்தம் இல்லை. அவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வது இல்லை. வீட்டில் இருந்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்கள் என நடிகை கூறியுள்ளார்.

ரசிகர்கள்
அந்த குடும்பத்தில் இருந்து வேலைக்கு வந்துள்ளது நான் தான். திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துவிட்டேன் என்கிறார் நடிகை. கணவருக்காக நடிப்பை நிறுத்தியதை நடிகை உளறிவிட்டார். இருப்பினும் அவர் மீண்டும் நடிப்பதை தொடர அந்த நடிகர் அனுமதித்தது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











