காதலா, வேண்டவே வேண்டாம்: தெறித்து ஓடும் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் காதல் என்றால் பயப்படுகிறார்.
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வளர்ந்த நடிகை தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் லிப் டூ லிப் காட்சிகள், படுகவர்ச்சி காட்சிகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதீத கவர்ச்சி காட்டினாலும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். அம்மணிக்கு காதல் என்றால் பயமாக உள்ளதாம். பசங்க யாரும் ப்ரொபோஸ் பண்ணவில்லை என்று ஃபீல் பண்ணிய அவர் தற்போது உல்டாவாக தெரிவித்துள்ளார்.
காதலில் விழுந்து கஷ்டப்படுபவர்களை பற்றி கேள்விப்பட்டும், செய்திகளில் படித்தும் பயந்துவிட்டாராம். காதல் என்றால் ஆபத்து என்ற முடிவுக்கு வந்துள்ளார் நடிகை. ஆள் அழகாக இருக்கிறார், நடிப்பும் நன்றாக வருகிறது. இருப்பினும் அவர் நடிப்பு திறமையை விட சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்களுக்காக அதிகம் பேசப்படுகிறார்.
தான் சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்பு கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர் அந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











