சிலர் சொன்னபடி கேட்டிருந்தால் கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் நான் தான்
சென்னை: சிலர் சொன்னபடி எல்லாம் நடந்திருந்தால் கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் நான் தான் என கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் நம்பிக்கை, கனவுகளுடன் கோலிவுட் வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முறைப்படி நடனம் கற்றுள்ள அவர் வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார்.

அந்த நேரம் பார்த்து பிரபல இயக்குனருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நடிகை மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது,
மலையாளத்தில் வாய்ப்பு கிடைக்க யோகம் மற்றும் காட்பாதர் தேவை. தமிழ் திரையுலகில் சிலர் சொன்னபடி எல்லாம் கேட்டு நான் நடந்திருந்தால் இன்றைய தேதிக்கு பிசியான ஹீரோயின் நான் தான் என்றார்.
நடிகையின் இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











