பட வாய்ப்புக்காக இப்படியா வாய் கூசாமல் பொய் சொல்வார் இந்த நடிகை?
Recommended Video

சென்னை: ஒரு நடிகை பட வாய்ப்புக்காக வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.
வேறு மாநிலத்தில் இருந்து வந்து சென்னையில் தங்கி தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகை. வளர்ந்து வரும் அவர் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர்.
தற்போது அவருக்கு மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளதால் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆசை
வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகைக்கு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் அதற்காக நடிகை பொய் சொல்வது தான் தவறு.

விருப்பம்
கோலிவுட்டில் தற்போது பிசியாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர விரும்புகிறார் நடிகை. அதற்காக நடிக்க வரும் முன்பில் இருந்து அந்த நடிகரை தான் மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுவதை கேட்டாலே சுத்தப் பொய் என்பது அனைவருக்கும் தெரிகிறது. பட வாய்ப்புக்காக அவர் வாய் கூசாமல் பொய் பேசுகிறார்.

நடிகை
நடிகை ஏற்கனவே ஒரு பெரிய பொய் சொல்லி வசமாக சிக்கியிருக்கிறார். அந்த பொய்யுடன் ஒப்பிடும்போது தற்போது கூறிய பொய் எல்லாம் ஒன்றுமே இல்லை. பட வாய்ப்பை பெற இளம் நடிகை ஒருவர் பொய் சொல்லி வரும் நிலையில் இவரும் அதே ரூட்டில் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகம்
நடிகை பொய் சொல்வது இருக்கட்டும் அவரின் ஆசையை அந்த ஹீரோ நிறைவேற்றி வைப்பது கடினம் தான். அவர் தனது படத்தில் இந்த நடிகையை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்வது இல்லை. அட்லீஸ்ட், தற்போதைக்கு பரிந்துரைப்பது இல்லை. அதனால் நடிகையின் விஷயத்தில் அவர் இறங்கி வர மாட்டார் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











