யாரும் வாலாட்டாமல் இருக்க சூப்பர் வழி கண்டுபிடித்த டீச்சர் நடிகை
சென்னை: டீச்சர் நடிகை சண்டக்கோழி மாதிரி நடந்து கொள்கிறாராம்.
மலையாளத்தில் வெளியான ஒரு படம் மூலம் பிரபலமானவர் அந்த டீச்சர் நடிகை. தெலுங்கு திரையுலகிலும் ஹிட்டான நடிகையாக உள்ளார். தமிழில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் அவர் அறிமுகமான படம் சரியாக ஓடவில்லை. படப்பிடிப்புக்கு வந்தால் யாருடனும் பேசாமல் இருக்கிறாராம். பேசினால் சண்டைக்கு பாய்கிறாராம்.
தன் மார்க்கெட்டின் நிலை தெரிந்தும் ஓவராக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு கண்ணை கட்ட வைக்கிறாராம். ஏற்கனவே அவர் மீது ஒரு ஹீரோ புகார் தெரிவித்துள்ளார்.
இப்படி எல்லாம் சண்டக்கோழியாக இருந்தால் தான் தன்னிடம் யாரும் வாலாட்ட மாட்டார்கள் என்பது நடிகையின் கணக்காம். நடிகை எதற்கும் அட்ஜஸ்ட் செய்யாததால் அவரின் பெயரை கெடுக்க வதந்திகள் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, நடிகையின் இமேஜ் டேமேஜ் ஆகிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











