Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒத்த விரலை காட்டிய நடிகை: நடையை கட்டிய இயக்குநர்
சென்னை: அழகி நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை அதிர வைத்துள்ளாராம்.
அழகி நடிகையை ஹீரோவை காதலிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வைக்கிறார்கள். அவர் நடித்துள்ள சில படங்களை பார்த்தால் இப்படி ஒரு முட்டாள்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க எப்படித் தான் ஒப்புக் கொண்டாரோ என்றெல்லாம் ரசிகர்கள் விமர்சித்தது உண்டு.
அவருக்கு தற்போது அதிக சம்பளம் வாங்க வேண்டும், வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தையும், கதாபாத்திரத்தையும் கொடுக்க யாரும் தயாராக இல்லை.
வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வேறு சில நடிகைகள் உள்ளார்கள். இந்த அம்மணியை அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க முடியாது என்கிறார்கள் இயக்குநர்கள். நடிகையை நம்பி வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்த ஒரு இயக்குநர் பட்ட கஷ்டத்தை பார்த்து மற்றவர்கள் பாடம் கற்றுக் கொண்டுள்ளனர். அம்மணி வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்த படம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
இனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்
இந்நிலையில் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்குமாறு இயக்குநர், தயாரிப்பாளர் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு அம்மணியோ ஒரு விரலை காட்டியுள்ளார். மேலும் நான் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹீரோவை காதலித்து, டூயட் பாட இவருக்கு ஒரு சி கொடுப்பதற்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம் அந்த இயக்குநரும், தயாரிப்பாளரும்.
அம்மணிக்கு பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் பாலிவுட்டில் அவரை யாரும் மதிப்பதே இல்லை. அவர் நடிக்கும் இந்தி படங்கள் ஒன்று ஓடுவது இல்லை, அப்படியே ஓடினாலும் பாவம் யாரும் நடிகையை கண்டுகொள்வது இல்லை.