கணவனை வளைத்துப்போட்ட நடிகை.. மகள் கொடுத்த வலி.. நிற்கதியாக நிற்கும் நடிகை!
சென்னை: தோழியாக வீட்டிற்குள் நுழைந்து கணவனை நடிகை ஒருவர் வளைத்துப்போட்டுக் கொண்டதால், பிரபல நடிகை யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கதியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்த அம்சமான நடிகையான இவர், மலையாள சினிமாவில் கொடி கட்டிப்பறந்தார். சினிமா பின்னணி இல்லாத போதும் தனது திறமையான நடிப்பால் குறுகிய காலத்திலேயே ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்ததை பெற்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

காதல் திருமணம்: மலையாள சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே, அதாவது தனது இருவதாவது வயதிலேயே தன்னுடன் இணைந்து நடித்த மலையாள நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து குடும்பத்தை கவனித்து வந்தார். இருவரும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
தோழி செய்த துரோகம்: நன்றாக இருந்த குடும்பத்தில் புயல் போல நுழைந்தார் மச்ச நடிகை. சினிமாவில் உயர்ந்த இடத்தை தொடவேண்டும் என்பதற்காக நடிகையின் கணவரிடம் நெருங்கி பழகினார். நாளடைவில் இவர்களின் நெருக்கம் அதிகமாகி தனிக்குடித்தனம் நடத்தும் அளவிற்கு போக, இந்த விஷயம் மலையான நடிகையின் வீட்டில் பூகத்தை ஏற்படுத்தியது.
மகள் கொடுத்த வலி: ஒரு பக்கம் தோழி, ஒரு பக்கம் கணவர் செய்த துரோகத்தை தங்கிக் கொள்ள முடியாத மலையாள நடிகை, வாழ்ந்த வாழ்க்கை போதும்டா சாமி என நீதிமன்றத்தை தனி விவாகரத்து பெற்றார். இந்த நேரத்தில் தனது ஆறுதலாக மகள் துணை நிற்பாள் என்று பார்த்தால், மகளோ நீதிமன்றத்தில் தந்தையுடன் செல்ல விருப்பப்படுகிறேன் கூறி தந்தையுடன் சென்றுவிட்டாள்.
நிற்கதியாக நிற்கும் நடிகை: தற்போது யாருடைய துணையும் இல்லாமல் நிற்கதியாக இருக்கும் மலையாள நடிகை, மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கும் பிடித்தமாக நடிகையாக மாறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











