Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வீட்டைவிட்டு ஓடிப்போய் அனன்யா ரகசிய திருமணம்!!
இந்தத் தகவலை அனன்யாவின் தந்தையே பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களிலும் நடித்துள்ளார். நல்ல நடிகை எனப் பெயரெடுத்த அவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயனுக்கும் காதல் மலர்ந்தது.
இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் பிப்ரவரி 3-ந்தேதி திருச்சசூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் அனன்யா பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நிச்சயதார்த்தத்தை அவர்கள் ரத்து செய்தனர். அனன்யாவையும் வீட்டில் சிறை வைத்தனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்ய முயற்சித்து வருவதாக ஆஞ்சநேயன் தெரிவித்தார். எற்கனவே திருமணமான விஷயம் அனன்யாவுக்கு தெரியும் என்றும் கூறினார்.
ஆனால் திருமணத்தை மறந்துவிட்டதாகக் கூறிவிட்ட அனன்யா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் அனன்யா தற்போது திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் ஆஞ்சநேயனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடித்தனம் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "எனது மகள் அனன்யா வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்பது உண்மைதான். அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆஞ்சநேயலுவை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் கணவருடன் வசிப்பதாக கூறுகின்றனர். அனன்யா எங்களுக்கு செய்தது பெரிய துரோகம். ஆஞ்சநேயன் அவளுக்குப் பொருத்தமானரில்லை. என் மகளுக்கு சின்ன வயது. ஆஞ்சநேயனுக்கு வயது அதிகம். இது எங்கே போய் முடியப் போகிறதோ...," என்றார்.