Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ் இருக்கு.. இதுல இது வேறயா.. ஆபாச பட விவகாரத்தில் சிக்கப் போகும் அடுத்த நடிகை?
மும்பை: அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் பிரபல நடிகை அடுத்ததாக ஆபாச பட விவகாரத்திலும் சிக்கப் போவதாக பரபரப்பு தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே பிரபல நடிகையின் கணவர் ஆபாச படங்களை தயாரித்த குற்றத்திற்காக கையும் களவுமாக சிக்கி கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைகிறாரா தனுஷ்...என்ன ரோல்...பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்காம்
அந்த விவகாரத்தில் கூடவே சேர்த்து மனைவி நடிகையையும் உள்ளே தூக்கி வைக்க போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரே ஏகப்பட்ட மோசடி விவகாரங்களிலும் சிக்கி இருப்பது அம்பலமாகி வருகிறது. இந்நிலையில், இன்னொரு பிரபல நடிகையின் பெயரும் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறதாம்.
போதை உலகம்
ஏற்கனவே பாலிவுட்டே போதைப் பொருள் உலகமாக மாறி உள்ள நிலையில், அங்கே புதிதாக ஆபாச பட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மத்தியில் ஆளும் அரசு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல் துறையை முடுக்கி விட்டு இருப்பதாக தெரிகிறது.
வாரிசு நடிகர்கள்
போதைப் பொருள் விவகாரத்தையும் தாண்டி வாரிசு நடிகர்களின் பிரச்சனை இன்னொரு புறம் பாலிவுட்டை நாசம் செய்து வருவதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. இளம் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் அதன் காரணமாகத்தான் என்றும் ஏகப்பட்ட பிரச்சனைகள் அங்கே ஓடிக் கொண்டிருகின்றன.
அந்த மாதிரி படங்கள்
ஒடிடிக்களின் வரவு காரணமாக சென்சார் பிரச்சனை ஏதும் இல்லாத நிலையில், அந்த மாதிரி படங்களை தாராளமாக எடுத்து ஒடிடி தளங்களிலும் ரகசிய ஆப்களிலும் தைரியமாக பல முன்னணி பாலிவுட் பிரபலங்களும் வெளியிட்டு புதிய தொழிலை ஆரம்பித்து சம்பாதித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிக்கிய பெரிய புள்ளி
ஏற்கனவே இந்த விவகாரத்தில் பிரபல நடிகையின் கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் ஏகப்பட்ட பெரிய புள்ளிகளின் தலை ஒளிந்திருப்பது கொஞ்சம் கொஞ்சமாக போலீசாருக்கு தெரிய வருகிறதாம். போதைப் பொருளில் சிக்கியதை போலவே பல பிரபல நடிகைகள் மற்றும் நடிகைகளும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம்
சர்ச்சை நடிகை ஒருவர் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள நிலையில், புதிதாக உங்களுக்கு ஏன் இந்த தெரியாத வேலை என சில நெருங்கிய நண்பர்கள் கேட்க, ஏற்கனவே சின்ன சின்ன வெப்சீரிஸ்களை தயாரித்த அனுபவம் தனக்கு இருப்பதாக கூறி மாட்டி இருக்கிறார் அந்த சர்ச்சை நடிகை.
அப்படி என்ன வெப்சீரிஸ்
அப்படி என்ன வெப்சீரிஸ் என தேடிய நெருங்கிய வட்டாரத்திற்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அந்த மாதிரியான படங்களை தயாரித்ததை தான் அந்த பிரபல நடிகை உளறி விட்டார் என்கிற விஷயம் தெரிய வர அப்படியே அவரும் ஷாக்கில் உறைந்து போயிட்டாராம்.
சோற்றில் பூசணிக்காய்
பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? ஒருவருக்கு ஒரு ரகசியம் தெரிந்து விட்டால் அதன் பின்னர் அது ரகசியமாகவே இருக்காது என்பது போல அந்த நெருங்கிய நண்பர் மூலமாகவே அந்த பெரிய ரகசியம் பாலிவுட்டில் தீயாக பரவப்பட்டு வருகிறது. சீக்கிரமே காவல் துறையின் கண்காணிப்புக்கும் அந்த தகவல் சிக்கி விட்டால், நடிகையின் நிலைமை ரொம்பவே மோசமாகிவிடும் என்கின்றனர்.
பக்கத்து நாட்டிலிருந்து பணம்
மேலும், அந்த நடிகைக்கும் நடிகையின் கணவருக்கும் நம்ம நாட்டுக்கே ஆகாத பக்கத்து நாட்டில் இருந்து கோடி கோடியாய் பணம் குவிகிறதாம். மறைமுகமாக ஏகப்பட்ட வேலைகளை பாலிவுட் நடிகை எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அந்த பிரபல நடிகை செய்து வருவதாகவும் ஏகப்பட்ட ரகசிய தகவல்கள் ஒவ்வொன்றாய் வெளியே வந்த படியே இருந்து வருகிறது.
மேலும் பலர்
இந்த ஆபாச பட விவகாரம் இவரோடு மட்டும் நிற்கப் போவதில்லையாம். மேலும், பல முன்னணி நடிகர்களும் இந்த விவகாரத்தில் மறைமுகமாவும், நேரடியாகவும் முதலீடுகளை போட்டு பல கோடி வருமானத்தை பார்த்துள்ள விவகாரங்களும் விரைவில் அம்பலமாகி ஏகப்பட்ட பேர் கம்பி எண்ண போகின்றனர் என பாலிவுட் பாபா தகவல் தெரிவித்துள்ளார்.