மில்க் நடிகையை அடுத்து விவாகரத்து பெறும் மல்லிகை நடிகை
சென்னை: மில்க் நடிகையை அடுத்து மல்லிகை நடிகையும் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயரில் மல்லிகையை வைத்துள்ள அந்த நடிகை கேரளாவை சேர்ந்தவர். தமிழில் சாக்லேட் பாயுடன் அறிமுகமாகி கோலிவுட்டிலும் பிரபலம் ஆனார். அவர் பிரபல இசைக் கலைஞரை திருமணம் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
பின்னர் துபாயில் வேலை செய்யும் என்ஜினியர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கணவரை விவாகரத்து செய்யப் போவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகையும், அவரது கணவரும் கடந்த 6 மாதங்களாகவே பிரிந்து வாழ்கிறார்களாம்.
பூசினாற் போன்று இருந்த நடிகை தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications