Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரு கூடு - இரு கூட்டு!
Click here for more images |
ஹாலிவுட் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை உயர்த்துவது குறித்து கோலிவுட்டில் சிலர் மாய்ந்து மாய்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலரோ, பாலிவுட் ரேஞ்சுக்கு சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகள் குறித்து வரும் வதந்திகள் படு கிளுகிளுப்பாக உள்ளது, திகிலடிக்கவும் வைக்கிறது.
நடிகர், நடிகைகள் குறித்த கிசுகிசுக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. ஆனால் தற்போது உலா வந்து கொண்டிருக்கும் ஒரு கிசுகிசு படு குஜாலாக இருக்கிறது.
நான் கடவுள் நாயகனும், மருதமலை இளவரசியும் படு நட்பாக இருக்கிறார்கள் என்பது கோலிவுட் அறிந்த உண்மை. இதை நாமும் முன்பே செய்தியாக தெரிவித்திருந்தோம். இந்த ஜோடியோடு, இன்னொரு ஜோடி படு நட்பாக பழகி வருகிறதாம் இப்போது.
பெல்காம் பேரழகியான ராயும், அவரது பாய் பிரண்டும் ஒரே பிளாட்டில் கொஞ்ச காலமாக தங்கியிருக்கிறார்கள். நீண்ட காலமாகவே இருவரும் நட்பு பாராட்டி வருகிறார்கள்.
இந்த ஜோடியும், கடவுள் ஜோடியும் இப்போது நெருக்கமாகி விட்டனராம். நான்கு பேரும் பல நேரங்களில் ராயின் பிளாட்டிலேயே தங்கி விடுகிறார்களாம். விடிய விடிய பேசிப் பேசி காதலை வளர்க்கிறார்களாம். பேச்சு பேச்சாக இருப்பதில்லை என்பதுதான் இந்த கிசுகிசுவின் ஹைலைட் மேட்டர்.
உற்சாகமாக, உல்லாசமாக நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தை விடிந்து வெள்ளைக்கோழி கூவும்போதுதான் முடிவுக்கு வருகிறதாம்.
கடவுளும், மருதமலையும் கூட இப்போதெல்லாம் சேர்ந்தேதான் தங்குகிறார்களாம். இருவரும் சேர்ந்து தங்கும் ஹோட்டலைச் சேர்ந்தவர்கள் அவர்களின் காதல் நெருக்கம் பற்றி கதை கதையாக பேசுகிறார்கள்.
நல்ல காதல், நல்லா வளரட்டும்!