தயாரிப்பாளருடன் சேர்ந்து கூத்தடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை?
திருவனந்தபுரம்: தேசிய விருது பெற்றுள்ள நடிகை திருமணமான தயாரிப்பாளருடன் சேர்ந்து கூத்தடிப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகை அவர். அவர் தற்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவான தமிழரின் புது தமிழ் படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார்.

நடிகைக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அவரும் படத்தின் தயாரிப்பாளரும் சேர்ந்து சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி கூத்தடித்தார்களாம்.
அவர்களின் சேட்டைகளை பொறுக்க முடியாமல் ஹோட்டல் நிர்வாகமே அவர்களை அறையை காலி செய்யச் சொல்லிவிட்டதாம். இதையடுத்து அவர்கள் சென்னையில் கெஸ்ட் ஹவுஸ் எடுத்து தங்கியுள்ளார்களாம்.
இந்தம்மா கூத்தடித்துக் கொண்டு மற்றவர்களை குறை சொல்கிறது என்கிறார்கள் மல்லுவுட்காரர்கள்.
Comments


Click it and Unblock the Notifications