அடுத்தவங்க வாழ்க்கையை கெடுப்பதே அந்த நடிகைக்கு வேலை.. எவ்ளோ நாளுன்னு பார்க்கிறேன்.. இப்படியொரு சாபமா?
சென்னை: தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல காரணமே அந்த பேபி நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பு தான் என பிரபலம் ஒருவரிடம் முதல் மனைவி புலம்பித் தவித்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்தையும் கெடுப்பது தான் அந்த நடிகைக்கு வேலை என நடிகையின் நெருங்கிய தோழியே பேசியிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
படத்தில் நடிக்க கணவர் முழு சுதந்திரம் கொடுத்த நிலையில், நடிகையின் அழகில் மயங்கிய இயக்குநர் ஹீரோயினை எப்படியும் ஆசை நாயகியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றூ விட்டார் என்றும் நடிகையின் மோகத்தால் ஏற்கனவே சில குடும்பங்கள் சிதைந்து போனதாகவும் மீண்டும் ஒரு குடும்பத்தை பகிரங்கமாக அவர் கெடுத்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

கண்டிப்பாக என்ன பரிகாரம் செய்து திருமணம் செய்தாலும், வாழ்க்கை நீடித்து இருக்காது என நடிகையின் கணவரின் மூத்த மனைவியிடம் பிரபலம் ஒருவர் பேசியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேராசை பெருநஷ்டம்: நடிகைக்கு எப்போதுமே பேராசை தான் என்றும் வாரிசு நடிகர் பல வருடங்களாக திருமணம் செய்யாமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க காரணமே நடிகை பார்த்த வேலை தான் என்றும் திடுக்கிடும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. மேலும், இன்னொரு நடிகர் தனது மனைவியை பிரிய காரணமும் இந்த நடிகையுடன் ஏற்பட்ட பழக்கம் தான் என்றும் கடைசியாகத்தான் பிரபல வாரிசு நடிகர் நடிகையின் வலையில் சிக்கி மாட்டிக் கொண்டார் என்கின்றனர்.
கண்ணீரில் முன்னாள் மனைவி: தனது வாழ்க்கையை நடிகை உள்ளே புகுந்து பறித்துக் கொண்டார் என்றும் தனது குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிட்டது என நடிகை பற்றி அவருடைய நெருங்கிய தோழி ஒருவரிடமே புலம்பித் தள்ளியிருக்கிறார் அந்த மாஜி மனைவி என்கின்றனர்.
சாபம் விடாத குறை: தோழிக்கும் நடிகையால் ஏதோ குடும்பத்தில் பஞ்சாயத்து போல தெரிகிறது. அந்த நடிகையின் வேலையே இதுதான் என்றும் எத்தனை நாள் இந்த வாழ்க்கை நிலைக்கிறது என்று நானும் பார்க்கிறேன் என சாபம் விடாத குறையாக மாஜி மனைவிக்கு ஆறுதல் சொல்லியுள்ளார் என கிசுகிசுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











