ஓவராப் பேசிய நடிகர்... நடிக்கத் தடை விதிக்க தயாரிப்பாளர்கள் ஆலோசனை
சென்னை: மதுரை பானம் பட ரிலீஸ் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்த புத்த நடிகருக்கு தமிழ்ப் படத்தில் நடிக்கத் தடை விதிக்கலாமா என தயாரிப்பாளர்கள் தரப்பு ஆலோசித்து வருகிறதாம்.
தமிழில் 'தீயாய் வேலை' செய்த படத்திற்குப் பிறகு, மதுரை பானப் படத்தினைத் தான் அதிகம் நம்பியிருந்தார் புத்த நடிகர். ஆனால் சிலப்பல காரணங்களால் அப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக முடியாமல் தள்ளிப் போனது.
இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த நடிகர் தனது ஆதங்கத்தை எல்லாம் சமூக வலைதளப்பக்கத்தில் கொட்டித் தீர்த்தார். ஆனால், இது தயாரிப்பாளர்கள் தரப்பை மிகவும் காயப்படுத்தி விட்டதாம்.
அதனால், தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிக்க நடிகருக்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறதாம். இதற்கிடையே படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமைந்துள்ளது.
அடுத்ததாக தனது பிரியமான நடிகையுடன் மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட படமொன்றின் தமிழ் ரீமேக்கில் நடிகர் நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











