பதுங்கிய பாவனா தயாரிப்பாளர் வீசிய பாங்காக் வலையிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளாராம் பாவனா.தமிழ் சினிமாக்காரர்களிடம் பாங்காக் போகலாமா என்று கேட்டாலே நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு பலானஇடமாக மாறி விட்டது பாங்காக். அங்கு ஷூட்டிங் போய் விட்டுத் திரும்பும் ஹீரோயின்கள் யாருமேசந்தோஷமாக திரும்பியதில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது சங்கடத்துடன் தான் திரும்புகிறார்கள்.சில மாதங்களுக்கு முன்பு கள்வனின் காதலி படத்திற்காக பாங்காக் போயிருந்த நயனதாராவுக்கு அங்கு பலசிக்கல்கள் ஏற்பட்டதாம். கடுப்புடன் திரும்பிய நயனதாரா இனிமேல் கள்வனின் காதலி யூனிட்டுடன் சேர்ந்துசெயல்படப் போவதில்லை என்ற முடிவை எடுத்தாராம்.அதனால் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தனது திருமகன் படத்தில் நடிக்க நயனதாராவைக் கூப்பிட்டபோதுமுடியவே முடியாது என்று கூறி விட்டாராம் நயனதாரா. அந்த அளவுக்கு பாங்காக்கில் அவர் படாதபாடு பட்டுவிட்டாராம்.இந்த நிலையில் தான் நடிகை பாவனா, பாங்காக் வலையிலிருந்து தப்பியுள்ளார். பாவனா நடித்து வரும் படம்ஒன்றின் தயாரிப்பாளர், பாங்காக்கில் சில காட்சிகளை சுட வேண்டும். போகலாமா என்று பாவனாவிடம்கேட்டுள்ளார்.படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், இப்போது எதற்கு பாங்காக்போக வேண்டும் என்று கூப்பிடுகிறார் என முதலில் குழம்பிய பாவனா, அடுத்த விநாடியே, மேட்டரை புரிந்துகொண்டு விட்டார்.ஆஹாஹா, பார்ட்டி அதுக்குத்தானா அடிபோடுகிறார் என்பதை உணர்ந்த பாவனா, சாரி சார், என்னிடம்பாஸ்போர்ட் இல்லை. புதிதாக அப்ளை செய்து வாங்க நேரமும் இல்லை. இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என நழுவி விட்டாராம்.இதனால் தயாரிப்பாளர் பார்ட்டி கடும் ஏமாற்றமாகி விட்டாராம். சே, திட்டமெல்லாம் பலிக்காமல் போய்விட்டதே என புலம்பிக் கொண்டுள்ளாராம். பாவனா இல்லாவிட்டால் என்ன, வேற யாரையாவது கூப்பிட்டுக்கொண்டு பாங்காக் போயே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் கொக்கு போல நிற்கிறாராம் அந்த வேகபார்ட்டி.பாவம் தான்!

By Staff
தயாரிப்பாளர் வீசிய பாங்காக் வலையிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளாராம் பாவனா.

தமிழ் சினிமாக்காரர்களிடம் பாங்காக் போகலாமா என்று கேட்டாலே நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு பலானஇடமாக மாறி விட்டது பாங்காக். அங்கு ஷூட்டிங் போய் விட்டுத் திரும்பும் ஹீரோயின்கள் யாருமேசந்தோஷமாக திரும்பியதில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது சங்கடத்துடன் தான் திரும்புகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு கள்வனின் காதலி படத்திற்காக பாங்காக் போயிருந்த நயனதாராவுக்கு அங்கு பலசிக்கல்கள் ஏற்பட்டதாம். கடுப்புடன் திரும்பிய நயனதாரா இனிமேல் கள்வனின் காதலி யூனிட்டுடன் சேர்ந்துசெயல்படப் போவதில்லை என்ற முடிவை எடுத்தாராம்.

அதனால் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தனது திருமகன் படத்தில் நடிக்க நயனதாராவைக் கூப்பிட்டபோதுமுடியவே முடியாது என்று கூறி விட்டாராம் நயனதாரா. அந்த அளவுக்கு பாங்காக்கில் அவர் படாதபாடு பட்டுவிட்டாராம்.

இந்த நிலையில் தான் நடிகை பாவனா, பாங்காக் வலையிலிருந்து தப்பியுள்ளார். பாவனா நடித்து வரும் படம்ஒன்றின் தயாரிப்பாளர், பாங்காக்கில் சில காட்சிகளை சுட வேண்டும். போகலாமா என்று பாவனாவிடம்கேட்டுள்ளார்.

படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், இப்போது எதற்கு பாங்காக்போக வேண்டும் என்று கூப்பிடுகிறார் என முதலில் குழம்பிய பாவனா, அடுத்த விநாடியே, மேட்டரை புரிந்துகொண்டு விட்டார்.

ஆஹாஹா, பார்ட்டி அதுக்குத்தானா அடிபோடுகிறார் என்பதை உணர்ந்த பாவனா, சாரி சார், என்னிடம்பாஸ்போர்ட் இல்லை. புதிதாக அப்ளை செய்து வாங்க நேரமும் இல்லை. இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என நழுவி விட்டாராம்.

இதனால் தயாரிப்பாளர் பார்ட்டி கடும் ஏமாற்றமாகி விட்டாராம். சே, திட்டமெல்லாம் பலிக்காமல் போய்விட்டதே என புலம்பிக் கொண்டுள்ளாராம். பாவனா இல்லாவிட்டால் என்ன, வேற யாரையாவது கூப்பிட்டுக்கொண்டு பாங்காக் போயே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் கொக்கு போல நிற்கிறாராம் அந்த வேகபார்ட்டி.

பாவம் தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X