மகளிடம் அத்துமீறி சில்மிஷம்.. காரி துப்பி எட்டி உதைத்ததால் கால் உடைந்து கிடந்த நடிகர்!

By Staff

சென்னை: அழகும் வசீகரமும் கொண்ட அந்த பெரிய நடிகர், தமிழ் சினிமாவில் எந்த நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அவர்களுடன் கிசுகிசுக்கப்படுவார். இவரின் அட்டகாசமான நடிப்பால், இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதால், கிசுகிசுவை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படி பெரிய நடிகரை நம்பி தனது வாழ்க்கையை ஒப்படைத்த நடிகை ஒருவரின் மகளிடமே, அந்த பெரிய நடிகர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அசாத்தியமான நடிப்பு, வசீகரமான அழகு, சினிமாவிற்கு தனது வாழ்கையை அர்ப்பணித்த அந்த பெரிய நடிகர்.. சிறு வயது முதல் தற்போது வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் பல ஆண்டுகள் ஜொலித்ததற்காக இவருக்கு பல விழாக்களும் நடத்தப்பட்டுள்ளது. இப்படி புகழ்பெற்ற நடிகரான அந்த பெரிய நடிகர், நடிகை விஷயத்தில் சற்று ஏடாகூடமானவர். தன்னுடன் எந்த நடிகை இணைந்து நடித்தாலும் அவர்களுடன் நெருங்கி பழகி, டேட்டிங், கசமுசா வரை சென்றுவிடுவது அவரின் வழக்கம்.

gossip kisu kisu kollywood

தனி இடம் உண்டு: அந்த பெரிய நடிகர் பார்ப்பதற்கு அழகாகவும் திறமையானவராகவும் இருந்ததால் பல நடிகைகள் அவர் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டனர். ஆனால், உஷாரான அந்த பெரிய நடிகர், அனைத்து நடிகைகளுக்கும் டாட்டா காட்டி விட்டு, பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெரிய நடிகரின் திருமணம் நடந்த போது பல நடிகைகள் கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நடிகைகள் மனதில் இவருக்கு என்று தனிஇடம் உண்டு.

திருமணம் தாண்டிய உறவு: முதல் திருமண வாழ்க்கை கசந்து போக இரண்டாவதாக ஒரு நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தை பிறந்த போது, இரண்டாவது மனைவியுடனும் ஒத்துப்போகாததால் அவரையும் விவாகரத்து செய்து விட்டு, ஒல்லி நடிகை ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து, அவருடன் திருமணம் தாண்டிய உறவில் வாழ்ந்து வந்தார். பெரிய நடிகருடன் நடித்த போது ஒல்லி நடிகைக்கும் மற்ற நடிகைகள் போல் இவர் மீது காதல் வந்துள்ளது. ஆனால், பெற்றோர் திருமணத்தை எதிர்த்தால், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

மோசமானவர்: ஆனால், ஒல்லி நடிகைக்கு கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால், அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னையில் பெரிய நடிகருடன் செட்டிலாகிவிட்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், பொது இடத்தில் ஜோடியாகத்தான் வலம் வந்தனர். ஆனால், திடீரென அந்த ஒல்லி நடிகை அவரைவிட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்து தற்போது, மகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பிரபலம், அந்த பெரிய நடிகர் பெண்கள் விஷயத்தில் மோசமானவர். மகளை போல நினைக்க வேண்டிய ஒல்லி நடிகையின் மகளிடமே அத்துமீறி நடந்திருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த ஒல்லி நடிகை, எட்டி உதைத்துத்தான் கால் உடைந்து கிடந்தார் என்று அந்த பிரபலம் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X