ஐஸ் வைத்தே காதலியின் கல்மனதைக் கரைத்த காதலர்!
பெரிய நம்பர் நடிகை இப்போது சிவனான இயக்குநருடன் லிவிங் டூகெதரில் இருந்து வருகிறார். அபார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக வசித்தவர்கள் சமீபத்தில் பிரிந்தனர். நடிகை தனியாக ஹோட்டலில் வசித்து வந்தார். ப்ரேக் அப் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த வாரம் மீண்டும் வீட்டுக்கே திரும்பி விட்டார் நடிகை. இதன் காரணம் தெரிய வந்துள்ளது.
மனக் கசப்பு வந்து பிரிந்தது உண்மையாம். ஆனாலும் விடாத காதலர் நடிகைக்கு ஐஸ் மேல் ஐஸ் வைத்து திரும்ப மனதிலும் வீட்டிலும் இடம் பிடித்திருக்கிறார். பெண்கள் தினத்துக்கு நடிகையை புகழ்ந்து ட்விட் போட்டவர் நடிகை நடித்து சமீபத்தில் வெளியான பேய் படத்துக்கு சென்சாரில் ஏ கொடுத்ததற்காக சென்சாரையே வசை பாடினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக நடிகைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்துப்போய் அருகில் இருந்து பார்த்துக்கொண்டாராம்.
இவற்றின் விளைவாகவே மீண்டும் நடிகையின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள்.
யாருக்கும் கிடைக்காத காதலர்தான்...!


Click it and Unblock the Notifications











