Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்!
சென்னை: தயாரிப்பு தரப்பு மற்றும் பிரம்மாண்டம் இடையே பேச்சுவார்த்தைகள் சுமூகமாக செட்டில்மென்ட் ஆக மீண்டும் அந்த தேசிய படத்தை இயக்க முடிவெடுத்த நிலையில், பாஸ் நடிகர் தன்னுடைய பஞ்சாயத்து முடியவில்லை என புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளாராம்.
உச்ச நடிகருடன் சுமூகமாக பல படங்களை முடித்து வந்த அந்த பிரம்மாண்டம் மீண்டும் பாஸ் நடிகருடன் கைகோர்த்து ஒரு தேசிய விருதை அள்ளலாமே என நினைத்த நிலையில் அந்த படம் எப்போ முடியும் என்றே தெரியாத நிலை உள்ளது.
என்னது...உங்க படத்த நீங்களே பார்த்தது இல்லையா...அப்போ நாங்க தான் சிக்கிட்டோமா ?
புதிய படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கி வருவதால் மீண்டும் அந்த படத்தில் இணையும் திட்டமே இப்போதைக்கு அவரிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சண்டையிட்டு சமாதானம்
பல கோடிகளை செலவழித்த நிலையில், இயக்குநருடன் மோதலில் இறங்கிய தயாரிப்பு தரப்பு எப்படி முட்டி மோதினாலும் பலன் இல்லை என்பதை புரிந்து கொண்டு சண்டையிட்டது போதும் வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது என சரண்டர் ஆகி சமாதானம் ஆகி விட்டது.
இரட்டை குதிரை சவாரி
ஆனது ஆச்சு.. போனது போச்சு என மீண்டும் அந்த படத்தை இயக்க ஓகே சொன்ன இயக்குநர் இன்னொரு படத்திலும் கமீட் ஆகி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட குதிரைகளிலும் சவாரி செய்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார். ஆனால், முக்கியமான அந்த முன்னணி நடிகர் திடீரென முரண்டு பிடிப்பதால் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
என்னோட பஞ்சாயத்து
பாஸ் நடிகர் ஏற்கனவே சில படங்களை அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நடித்துக் கொடுப்பதாக வாங்கிய பணம் எல்லாம் செலவு ஆன நிலையில், உங்க பஞ்சாயத்து முடிந்து விட்டது. என்னோட பஞ்சாயத்து இன்னமும் செட்டில் ஆகவில்லையே அப்புறம் நான் எப்படி வந்து நடிப்பது என பெரிய பூகம்பத்தை கிளப்பி உள்ளாராம்.
பெரிய நஷ்டம்
இந்த நடிகரை நம்பி வந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்கனவே பல கோடிகள் நஷ்டமான நிலையில், மீண்டும் தாமதம் ஆனால், மேலும் பல கோடிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் நடிகருடனும் சுமூக செட்டில்மென்ட்டை செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அதற்காகத் தான் இந்த விவகாரத்தில் இதுவரை அந்த பாஸ் நடிகர் அமைதி காத்து வருகிறாராம்.
ரொம்ப லேட்டாகும்
ஒதுக்கிய தேதிகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில், மீண்டும் அந்த படத்திற்காக தேதிகளை ஒதுக்க ரொம்ப லேட்டாகும் என்றும், அந்த பண விவகாரத்தை முடித்துக் கொண்டால் பார்க்கலாம் என்றும் நடிகர் டீல் பேசி வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் விழி பிதுங்கி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.