Just In
- 37 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எல்லாருக்கும் சான்ஸ் கொடுக்குறார்.. என்னை கண்டுக்க மாட்டேங்குறாரு.. புலம்பும் அண்ணன் இயக்குநர்!
சென்னை: அந்த ஒல்லி நடிகரின், அண்ணன் இயக்குநர், இயக்கத்தில் கடைசியாக வந்த அந்த அரசியல் படம் பயங்கரமாக அடிவாங்கியது.
புதிய படத்தை இயக்கலாம் என்று பார்த்தாலோ, எல்லா நடிகர்களும், இவரிடமா மாட்டவே கூடாது என எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.
இந்நிலையில், தனது தம்பி நடிகருக்கு, தொடர்ந்து தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம் அந்த அண்ணன் இயக்குநர்.
நேத்து அந்நியன்.. இன்னைக்கு ரெமோ.. சியான் விக்ரமை என்ன பண்ணி வச்சிருக்காய்ங்களோ?

ஒரு காலத்தில்
காதல் படங்கள் என்றாலே, இந்த இயக்குநர் தான் முன்னணியில் இருந்தது எல்லாம் அது ஒரு கனா காலாமாக மாறி விட்டது. அந்த சரித்திர படத்திற்கு பிறகு, இவருக்கு தொற்றிக் கொண்ட ஹாலிவுட் ரேஞ்ச் ஆசை தான் இவரது சரிவுக்கு காரணம் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

விவாகரத்து பிரச்சனை
தனது படத்தில் அறிமுகமான நடிகையுடன், ஏற்பட்ட காதலை தொடர்ந்து, அவரை திருமணம் செய்து கொண்ட அந்த இயக்குநர், அந்த வரலாற்று படத்தில், மற்றொரு நடிகையுடன் ஏற்பட்ட காதலால், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அந்த நடிகையும் அதன் பிறகு தவித்து வருகிறார்.

தம்பி செட்டில்
ஆனால், அண்ணன் தயவால், கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த தம்பி நடிகர், தொடர்ந்து உழைத்து, தனது முயற்சிகளால் அடுத்த கட்டத்திற்கு போயுள்ளார். மேலும், உச்ச நடிகரின் மாப்பிள்ளை ஆன பிறகு, இனிமேல் தனக்கென்ன கவலை என்றும், செம செட்டில் ஆகியுள்ளார் தம்பி நடிகர்.

பறக்கிறார்
பாலிவுட்டுதான், ஹாலிவுட்டு தான் என தம்பி நடிகர் உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணன் நடிகரோ, அவரை அண்ணாந்து பார்த்தபடி ஏக்கத்துடன், அடுத்த படத்தை எப்படியாவது தம்பியை வைத்து பண்ணி விட வேண்டும், சிக்க மாட்டேங்குறானே என்ற ஃபீலிங்கில் தவித்து வருகிறார்.

கிடைத்த வாய்ப்பை
அல்வா போல, அந்த பிரைட் நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பு, அந்த அண்ணன் இயக்குநருக்கு கிடைத்தது. தரமான ஒரு படத்தை இயக்கி, தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து, திரும்ப வந்துட்டான் கபாலி என காலரை தூக்கி போடுவார், என்று பார்த்தால், அவரது படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கி வீசி விட்டனர்.

ஏமாந்த நடிகர்
அய்யா பழைய ஐயிட்டங்காரர் ஆச்சே, பெரிய வித்தையை தனக்காக இறக்கி செமயா செய்வார் என்று எதிர்பார்த்த அந்த பிரைட் நடிகரை இவர் வச்சு செய்ய, அந்த நடிகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்னடா எவன் கிட்ட போனாலும், பல்பு கொடுக்குறாங்களே என அடுத்த படத்துக்கு தீவிரமா உழைத்துள்ளார்.

ஓகே
அண்ணனின் தொடர் புலம்பல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சிபாரிசுகளால், என்ன செய்வதென்றே தெரியாமல், சரி, கைவசம் இருக்கும் படத்தை எல்லாம் முடித்து விட்டு, ஒரு படம் பண்ணலாம் என தம்பி நடிகர் ஓகே சொல்லி உள்ளாராம். அந்த கேங்ஸ்டர் படம் அல்லது அந்த வரலாற்று படத்தின் இரண்டாம் பாகம் என இரண்டில் ஒரு கதையை தூசி தட்டி எழுதி வருகிறாராம் அந்த அண்ணன் இயக்குநர்.