வெறும் நகை மட்டும் போதும்.. நள்ளிரவில் அப்படி ஒரு போஸ் கேட்ட தொழிலதிபர்.. விளாசிய நடிகை!

By Staff

சென்னை: பெரிய இயக்குநரால் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அந்த பவ்யமான நடிகை. அறிமுகமான சில நாள்களிலேயே ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். வரிசையாக பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பெயர் எடுத்தார். தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகையாக இருந்தாலும், கட்டாயம் இந்த நடிகையின் இரண்டு படங்களாவது வெளியாகிவிடும் என்கிற அளவிற்கு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்துக்கொண்டிருந்த, பவ்யமான நடிகைக்கு திடீரென மார்க்கெட் சரிந்ததும் மலையாளி ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், சினிமா பக்கம் வராமல் இருந்த அந்த நடிகை, திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே கணவரை பிரிந்து வந்துவிட்டார். விவாகரத்திற்கான காரணம் என்ன என்று யாருக்கும் சொல்லாமல், காதும் காதும் வைத்தது போல, விவாகரத்தை வாங்கிவிட்டார். அதோடு மட்டுமில்லாமல், அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அந்த பவ்யமான நடிகையோ, நான் கணவரோடு வாழ்ந்ததே ஓராண்டு தான் அதற்குள் குழந்தையா கேட்டு வருகிறார். கணவரை பிரிந்து வந்த அந்த பவ்யமான நடிகை, அதன்பின் கிடைத்த கதாபாத்திரத்தில் அண்ணியாக, அம்மாவாக, அக்காவாக நடித்து வருகிறார்.

Tamil cinema gossip
Photo Credit:

அரசியல் புள்ளி தான் காரணம்: இவர் அரசியல் பிரமுகர் ஒருவருடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், அவர் தான் இந்த நடிகைக்கு பல கோடியில் வீட்டை பரிசு அளித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு முறை இந்த பவ்யமான நடிகை, படப்பிடிப்பில் இருந்து, அவசரமாக போக வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், அந்த பிரபல இயக்குநரோ, இப்போது முடியாது என சொல்லி இருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த பவ்யமான நடிகை, இந்த விஷயத்தை அரசியல் புள்ளியிடம் சொல்ல, அவரோ, அடி நாட்களுடன், படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரகளை செய்துள்ளார். இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பலருக்கும் தெரிய வந்த பிறகு தான், பவ்யமான நடிகையின் மார்க்கெட் குறைந்தது. இவரை படத்தில் கமிட் செய்தால், நமக்குத்தான் பிரச்சனை என பலரும் இவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல், கணவரை விட்டு பிரிந்து வரவும், அந்த அரசியல் புள்ளியுடன் இருந்த தொடர்புதான் காரணம் என சொல்லப்படுகிறது. கணவரை பிரிந்து வந்த பிறகும், அந்த அமைச்சருக்கு பவர் இல்லை என்றாலும், விட்ட குறை தொட்ட குறையாக அந்த அரசியல் பிரமுகர் வீட்டை பரிசளித்து அந்த நடிகை கவனித்துக்கொள்கிறார்.

வெறும் நகை போதும்: ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைக்கு திடீரென மார்க்கெட் சரிந்து போக, நகைகடை தொழிலதிபர் ஒருவர், உடைகள் இல்லாமல், வெறும் நகையை மட்டும் போட்டு, தனக்கு மட்டுமே நடனமாடும் படி கேட்டுள்ளார். இதற்கு பெரும் தொகை பேசப்பட்டது. முத்த காட்சியிலே நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்த அந்த பவ்யமான நடிகை, அந்த நகை தொழிலதிபரை விளாசி இருக்கிறார். நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிட்டால், சில தொழிலதிபர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள், என பிரபலம் ஒருவர், பவ்யமான நடிகை குறித்து பேசும் போது, இந்த தகவலை சொல்லி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X