Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனா பிரச்னை முடிஞ்சாலும் கிடைக்குமோ, கிடைக்காதோ? சத்தம் போடாம இந்த முடிவை எடுத்திருக்காங்களாம்!
சென்னை: கிடைத்தவரை லாபம் என்று இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் சினிமாவில்.
Recommended Video
கொரோனா எல்லா திட்டங்களையும் தலைகீழாக மாற்றி போட்டிருக்கிறது. இதனால், உலக நாடுகளில் இருந்து உள்ளூர் வரை கடும் பாதிப்பில் இருக்கிறது.
உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றன, உலக நாடுகள்.
200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்.. மனிதாபிமானத்துடன் ரகுல்.. மற்ற நடிகைகளும் உதவலாமே !
பொதுமக்கள்
இந்தியாவுக்குள்ளும் நுழைந்த கொரோனா, அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இங்கும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
பைனான்ஸ்
சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் சினிமா துறையும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளன. ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. பெரிய படங்களாவது பரவாயில்லை. சிறிய பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பைனான்ஸ் வாங்கிதான் படம் தயாரிக்கிறார்கள்.
சந்தேகம்
இதற்காகவே இருக்கும் பைனான்ஸியர்கள், பல படங்களுக்கு கோடிகளில் கடன் கொடுத்திருக்கிறார்கள். இந்த கொரோனா பிரச்னை முடிய இன்னும் சில மாதம் ஆகும் என்று நினைக்கும் அவர்கள், பிரச்னை முடிந்தாலும் தியேட்டர்களுக்கு மக்கள் உடனடியாக வருவார்களா என்று சந்தேகம் கொள்கிறார்கள்.
அசல் மட்டுமாவது
மக்கள் இயல்பு நிலைக்கு வரவே சில மாதங்கள் ஆகும் என்பதால், சில சினிமா பைனான்சியர்கள் இப்படி ஒரு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, பெரிய படங்களை தவிர வேறு யாருக்கும் இனி பைனான்ஸ் பண்ண வேண்டாம். ஏற்கனவே கொடுத்த பணத்தில், அசலை மட்டுமாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.