நடிகையிடம் மயங்கிக் கிடக்கும் நடிகர்.. சரக்கு எல்லாத்தையும் பிழிந்து எடுத்துட்டுத்தான் விடுவாங்க போல
மும்பை: சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் அந்த நடிகர். நடிகராவதற்கு முன்னரே, சினிமா உலகில் நன்கு பிரபலமடைந்தவர். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். சில படங்களில் வெற்றி, சில படங்களில் தோல்வி, சில படங்கள் சுமார் என தன்னை ஒரு நடிகனாக காட்ட அவர் எவ்வளவோ முயற்சித்து வருகின்றார். இப்படியான நிலையில் இவர் நடித்த ஒரு படத்தின் நாயகியோடு ஏற்பட்ட பழக்கம், இப்போது அவரை நடிகையிடமே தஞ்சம் அடைய வைத்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகுதான் சினிமாவில் நடிகராக களமிறங்கினார் அந்த நடிகர். இவர் நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பு இருந்ததால், தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டார். ஒரு நல்ல படம் கொடுத்தால், அடுத்ததாக மூத்தோர்கள் பார்க்கக் கூடிய திரைக்கதை கொண்ட நடிகைகளுடன் மிகவும் நெருக்கமான காட்சிகள் கொண்ட படத்தில் நடித்து அட்டகாசப்படுத்திவிடுவார். இதற்காகவே இவரது படத்திற்காக தனி ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது ஏக பத்தினி விரதம் இருந்த நடிகர், அதன் பின்னர் அந்த விரதத்தினை கைவிட்டுவிட்டு, தான் நடிக்கும் படங்களின் நடிகைகளுடன் அவ்வப்போது அவுட்டிங் போவதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார். என்னதான் நடிகைகளுடன் நெருக்கம் காட்டினாலும், வீட்டில் மனைவிக்கு அன்பான புருஷனாக கொஞ்ச காலம் மேனேஜ் செய்துள்ளார். ஆனாலும் அந்த நடிகையுடனான நெருக்கத்தினால், மனைவியை விவாகரத்து செய்தாராம்.
என்ஜாய்: நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது, மனைவி கொஞ்சம் கண்டித்தும் உள்ளார். ஆனால் நடிகர், இயக்குநர் மீது கையை நீட்ட, மனைவி ஆஃப் ஆகியுள்ளார். இப்படி இருக்கும்போது, ஒரு படத்தில் நடிக்கும்போதும் சரி, அதன் பின்னரும் சரி நடிகையை அப்படி இப்படி எனப் பேசி, வளைத்துப் போட்டுள்ளார் நடிகர். நடிகரின் பேச்சுக்கும் பர்ஃபாமன்ஸ்க்கும் மயங்கிய நடிகை நடிகரை விடவே விடமாட்டேன் எனத் தெரிவித்துவிட்டாராம். அண்மையில் கூட நடிகைக்கு பிறந்த நாள் வந்துள்ளது. அப்போது நடிகருடன் அவுட்டிங் போகவேண்டும் என ஒரு தனித்தீவுக்குப் போய் செம என்ஜாய் செய்துவிட்டு வந்தார்களாம்.
தனித்தீவு: தனித்தீவுக்குப் போயிட்டுவந்த பின்னர் நடிகையை விடாமல் துரத்திக் கொண்டு உள்ளாராம் நடிகர். குறிப்பாக தனது படத்தின் கமிட்மெண்ட்களையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு, நடிகையின் வீட்டிலேயே தங்கிவிட்டாராம். யார் போன் செய்தாலும் எடுப்பதில்லையாம். அவரது மேனேஜரே போன் செய்தாலும் எடுப்பதில்லையாம். நடிகையும் விடுவதாக இல்லையாம், போகின்ற போக்கினைப் பார்த்தால் நடிகரின் பர்ஸை காலி செய்துவிட்டுத்தான் அவரை விடுவார் போல. இவரை நம்பி பணத்தை போட்டுள்ள தயாரிப்பாளரின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டு உள்ளது பாலிவுட் வட்டாரம்.


Click it and Unblock the Notifications











