Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மியாவ் நடிகைக்கும் போய்யா நடிகைக்கும் முட்டிக்கிச்சாமே?
சென்னை: டிவியில் இருந்து வந்தாலும் வந்த வேகத்திலேயே டாப் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார் அந்த ஹீரோ. காமெடி ஹீரோ என்றாலும் படங்கள் வசூலை குவிப்பதால் இப்போது அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே உள்ளது. ஹீரோவுடன் ஜோடி போட ஹீரோயின்களும் ஆசைப்படுகின்றனராம்.
ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து லக்கி ஹீரோயின் என்று பெயரெடுத்த 'மியாவ்' நடிகைக்கும், இப்போது இரண்டு படங்களில் ஜோடி போடும் 'போய்யா' நடிகைக்கும் இடையேதான் போட்டியாம்.
ஹீரோ உடன் யார் ஜோடிபோடுவது. படத்தை யார் கைப்பற்றுவது என்பதில்தான் இப்போது இருவருக்கும் இடையே கோல்டு வார் நடக்கிறது என்று குறி சொல்கிறார் கோடம்பாக்கம் கோவிந்தம்மாள்.
போய்யா நடிகையின் வருகையால் தனக்கு வாய்ப்புகள் குறைந்து வருவதாக மியாவ் நடிகை நினைக்கிறாராம். முதல் இரண்டு படங்களில் அந்த ஹீரோ உடன் நடித்த மியாவ் நடிகை, இப்போது ஹீரோ பெண் வேடம் போடும் படத்திலும் ஒரு பாடல் காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் வருந்தி கேட்டுக்கொண்டாராம். நடிகையின் ராசியை உணர்ந்து ஹீரோவும் ஓகே சொல்லி விட்டாராம்.
அந்த ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நினைத்து இப்போது போய்யா நடிகை கோபத்தில் பொங்கிப் போய் இருக்கிறாராம். தமிழ்நாட்டு ஹீரோவை மடக்க அக்கட தேசத்து நாயகியும், அவ்விட தேசத்து நாயகியும் போடும் போட்டிதான் இப்போது ஒரே பேச்சாக உள்ளதாம்.
இப்போது உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பகை ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் என்று குறி சொல்லுகிறார் கோடம்பாக்கம் கோவிந்தம்மாள்.