சாண்டலின் கொந்தளிப்பு... தவிக்கும் ஹீரோ
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள்தான் சாண்டலும், எதிர்நீச்சல் போட்ட ஹீரோவும்.
இருவரும் இணைந்து இதுவரை படம் நடிக்க வில்லை. இவர்கள் இருவரையும் இணைக்க தயாரிப்பாளர்கள் நினைத்தாலும் சாண்டல் நடிகர் ஒத்துக் கொள்வதில்லையாம்.
எடுபிடி வேலை பார்த்தவன் ஹீரோவாக நடிக்கும் போது நான் அந்த படத்தில் காமெடியானாக நடிப்பதா? என்று எக்கச்செக்க டென்சன் காட்டுகிறாராம் சாண்டல்.
இதனால் செய்வதறியாது தவிக்கிறாராம் எதிர்நீச்சல் ஹீரோ. அது இது எது செய்த போது கூட இவ்வளவு சிக்கலில் ஹீரோவான பின்னர்தான் யார் எப்படி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று புலம்புகிறார் ஹீரோ.
சங்கத்தை வச்சுக்கிட்டு வருத்தப்படலாமா? என்று ஆறுதல் கூறுகின்றனர் அவரது நண்பர்கள்.


Click it and Unblock the Notifications











