முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த வாரிசு நடிகை: கிலியில் மற்றொரு வாரிசு நடிகை
சென்னை: கோடம்பாக்கத்திற்கு புதிதாக வந்துள்ள வாரிசு நடிகையை பார்த்து ஏற்கனவே இங்கிருக்கும் மற்றொரு வாரிசு நடிகைக்கு லைட்டா பயம் வந்துவிட்டதாம்.
அண்டை மாநிலத்தில் இருந்து வந்த வாரிசு நடிகை தான் தற்போது கோடம்பாகத்தின் மோஸ்ட் வாண்டட் நாயகி. அம்மணி தனக்கு இருக்கும் மவுசை உணர்ந்து கொண்டு அண்மையில் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டார்.

என்னடா இந்த பொண்ணு இப்படி சம்பளத்தை உயர்த்திவிட்டதே என்று தயாரிப்பாளர்கள் நினைக்கும்போது அவரது மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வாரிசு நடிகை இங்கு வந்துள்ளார்.
புதிதாக வந்துள்ள நடிகையின் முதல் படம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக அம்மணியின் நடிப்பை பார்த்து ஆளாளுக்கு புகழ்கிறார்கள். முதல் படம் போன்றே இல்லையே, அருமையாக நடித்துள்ளார் என்கிறார்கள்.
இதை பார்த்து ஏற்கனவே இங்குள்ள வாரிசு நடிகைக்கு லைட்டா பயம் வந்துள்ளதாம். அம்மணிகளுக்கு இடையே அதற்குள் போட்டி ஏற்பட்டுவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











