Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெண்களின் வாழ்க்கை விளையாட்டாப் போச்சா?: நடிகர், டிவி சேனல் மீது போலீசில் புகார்
Recommended Video
சென்னை: டி.ஆர்.பி.க்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதா என்று கூறி பிக்கப் டிராப் நடிகர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளாராம்.
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் தேடுவதாகக் கூறி தமிழுக்கு புதிதாக வந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று நிகழ்ச்சியை நடத்தியது. 16 பெண்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் யாரையும் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் நடிகருக்கும், சேனலுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
புகார்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் தந்தை டிவி சேனல் மற்றும் நடிகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளாராம். சேனல் வளர்ச்சிக்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளதாக அவர் புகார் அளித்துள்ளாராம்.
5வது இடம்
புதிதாக துவங்கப்பட்ட அந்த சேனல் பெண் தேடும் நிகழ்ச்சியால் மட்டும் தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி பெற பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடிவிட்டார்கள் என்று அந்த போட்டியாளரின் தந்தை ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளாராம்.
10 கோடி
பெண் தேடிய நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்களாம். தமிழகத்தில் வந்த வேகத்தில் வளர இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திவிட்டார்கள் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நடிகர்
போட்டியாளரின் தந்தை அளித்த புகாரால் நடிகர் மற்றும் டிவி சேனல் கலக்கத்தில் உள்ளதாம். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட பல விஷயங்கள் போலியானவை என சினிமா பிரபலங்கள் சிலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.