Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண்களின் வாழ்க்கை விளையாட்டாப் போச்சா?: நடிகர், டிவி சேனல் மீது போலீசில் புகார்
Recommended Video
சென்னை: டி.ஆர்.பி.க்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதா என்று கூறி பிக்கப் டிராப் நடிகர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளாராம்.
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் தேடுவதாகக் கூறி தமிழுக்கு புதிதாக வந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று நிகழ்ச்சியை நடத்தியது. 16 பெண்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் யாரையும் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் நடிகருக்கும், சேனலுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
புகார்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் தந்தை டிவி சேனல் மற்றும் நடிகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளாராம். சேனல் வளர்ச்சிக்காக பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளதாக அவர் புகார் அளித்துள்ளாராம்.
5வது இடம்
புதிதாக துவங்கப்பட்ட அந்த சேனல் பெண் தேடும் நிகழ்ச்சியால் மட்டும் தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி பெற பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடிவிட்டார்கள் என்று அந்த போட்டியாளரின் தந்தை ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளாராம்.
10 கோடி
பெண் தேடிய நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்களாம். தமிழகத்தில் வந்த வேகத்தில் வளர இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திவிட்டார்கள் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நடிகர்
போட்டியாளரின் தந்தை அளித்த புகாரால் நடிகர் மற்றும் டிவி சேனல் கலக்கத்தில் உள்ளதாம். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட பல விஷயங்கள் போலியானவை என சினிமா பிரபலங்கள் சிலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.