மும்பைக்கே பறந்துவிட்ட முதல் எலிமினேட்டட் நடிகை!
பெரிய முதலாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நடிகை அந்த நிகழ்ச்சிக்கு பின்னும் வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரான மும்பைக்கே திரும்பி விட்டாராம்.
மைண்ட்ல படம் மூலம் அறிமுகமானவர் அந்த மூன்றெழுத்து மும்பை நடிகை. முதல் படத்திலேயே கலகலப்பான ஆர்ஜேவாக நடித்து பிரபலமானார்.
ஆனால் அவருக்கு அதன் பின் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு வினையாக அமைந்தது லீக்ஸ் விவகாரம். அதில் நிர்வாண படங்கள் வெளியாக நடிகையின் இமேஜ் டேமேஜ் ஆனது. அதனை மாற்றுவதற்காக பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓகே சொன்னார்.
ஆனால் அதிலும் முதல் ஆளாக வெளியேற வேண்டியதாயிற்று. இனி இங்கிருந்தால் பயனில்லை என்று மும்பைக்கே திரும்பி விட்டாராம். விரைவில் திருமண அறிவிப்பு வரலாம்.
Comments


Click it and Unblock the Notifications