Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சீக்ரெட்டா சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கப் போகும் விவகாரமான நடிகை.. அந்த ஷோவுக்கும் அழைப்பாம்!
சென்னை: விவகாரமாக நடித்து ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்தித்து ஆள் அட்ரஸே தெரியாமல் போன அந்த நடிகை சீக்ரெட்டா சின்னத்திரை பக்கம் ஒதுங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மாஸ் ஹீரோவுக்கே ஜோடியாக நடித்து மாஸ் காட்டி வந்த அந்த நடிகையின் சேப்டரே அந்த ஒரு படத்தின் மூலம் க்ளோஸ் ஆகும் என அவரே நினைத்து பார்க்கவில்லை.
இந்நிலையில், சின்னத்திரையிலேயே கொஞ்ச காலத்துக்கு செட்டில் ஆகி ரசிகர்களை கவர திட்டம் போட்டுள்ளாராம்.
மனைவியின் கதையிலிருந்து தப்பித்த நான் அந்த இயக்குநரிடம் மாட்டிக் கொண்டேன்... உதயநிதி கலகல பேச்சு
எங்கே முட்டினாலும்
கோலிவுட்டே வேண்டாம் என பக்கத்து வுட்களில் முட்டிய போதும், தலை வீங்கியதே தவிர சான்ஸ் ஏதும் சரியாக அமையவில்லையாம் அந்த நடிகைக்கு என்பதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். முன்னணி நடிகர்கள், நண்பர்கள் என இருந்தவர்கள் எல்லம் கை விரித்த நிலையில், என்ன செய்யலாம் என சிந்தித்தவர் சின்னத்திரை பக்கம் ஒதுங்க முடிவெடுத்து விட்டாராம்.
சீக்ரெட்டா சின்னத்திரை
சினிமா சான்ஸ் சுத்தமாக வராமல் போன நிலையில், வெப்சீரிஸ்களில் பிட்டு நடிகையாக நடிக்கவே அழைக்கின்றனர் என்பதால், அங்கேயும் அடிக்கடி போகாமல் ஒதுங்கி வந்த அந்த விவகாரமான நடிகை சீக்ரெட்டா சின்னத்திரை பக்கம் ஒதுங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த ஷோவுக்கும் அழைப்பு
அந்த பிரம்மாண்ட ஷோவில் கலந்து கொண்டு கலக்கியவர்களின் நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரையில் ஒதுங்க வந்திருக்கிறார் அந்த நடிகை. மேலும், சர்ச்சைக்கு சற்றும் பஞ்சமில்லாத இந்த நடிகையை எவ்வளவு பணம் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்த நிர்வாகம், பேரம் பேசுவதற்கு முன்பாகவே இவரே வருவதாக க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
அந்த நடிகையை போலவே
ஏற்கனவே ஒரு கேரள நடிகை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிலையில், அவரை போலவே இன்னொரு மலையாள மங்கையான இந்த நடிகையும் தன் வாழ்வில் அனுபவித்த சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம் சொல்வதற்கு அதுதான் சரியான பிளாட்ஃபாரம் என நினைத்து அதில் குதிக்க போவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஜாக்பாட் தான்
அந்த நடிகை மட்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், நிச்சயம் டைட்டிலை அவர் தான் தட்டித் தூக்குவார் என இப்போதே அவரை உசுப்பேற்றி விட்டு நிகழ்ச்சிக்குள் எப்படியாவது கொண்டு வர பெரிய திட்டமே நடக்கிறதாம். அனைத்தும் ஓகே ஆகி அந்த நடிகை உள்ளே வந்தால், பழைய பிரச்சனைகள் எல்லாம் மாறி நிச்சயம் ஜாக்பாட் தான் என்கின்றனர்.