Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாமினி படும் பாடு விஜய்காந்த் நடித்து வரும் பேரரசு படத்தில் அவருக்கு ஜோடி சேருகிறார் தாமினி.விஜய்காந்துக்கு மகள் மாதிரி இருந்தாலும், எனக்கு அது வேணும் என்று கேப்டன் ஆர்டர் போட்டு புக் செய்யப்பட்ட ஹீரோயின்.புளோரா, லயா போன்ற முத்திய பார்ட்டிகளுடனும், நமிதா, சூசன் போன்ற துள்ளும் இளமை குட்டிகளுடன் மாறி மாறி ஜோடிபோடுவது கேப்டனின் சமீபகால வாடிக்கையாக உள்ளது.இந்த வரிசையில் இப்போது கேப்டனின் ஹீரோயினாகியிருக்கும் தாமினி, ஒரு மும்பை பிகர்.ஒரு பக்கம் அரசியல் ஆட்டத்துக்குத் தயாராகிக் கொண்டே, தாமினியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்விஜய்காந்த். படத்தைத் தயாரிப்பது ரோஜா கம்பைன்ஸ் காஜாமொய்தீன். இவர் தான் கமல்- கெளதமை வைத்து வேட்டையாடுவிளையாடு படத்தையும் எடுத்து வருகிறார்."பேரரசு ஒரு ஆக்ஷன் சப்ஜெக்ட். சிபிஐ அதிகாரியாக வந்து தப்பு செய்கிறவர்களை தேடிப் பிடித்து அரை மணி நேரம் லியாகத்அலிகான் வசனம் பேசி டார்ச்சர் செய்துவிட்டு, பின்னர் அடித்து உதைக்கும் வழக்கமான விஜய்காந்த் பார்முலா படம் தான்.படத்தின் ஆக்ஷனுடன் இளமையையும் வழிய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேலை தாமினிக்கு. அதை நன்றாகவேசெய்கிறாராம் தாம்ஸ்.விஜய்காந்த் படத்தில் ஹீரோயினுக்கு அதிக வேலை இருக்காது என்பதால், எப்போதாவது கூப்பிட்டு அவரை ஆடச்சொல்கிறார்கள். அப்புறம் கூப்பிடும்போது வரணும் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.தாமினியால் வீட்டில் சும்மா இருக்க முடியுமோ?.. அப்படியே சினிமா கம்பெனிகளில் படி ஏறிக் கொண்டிருக்கிறார். வாய்ப்புக்கேட்டுத்தான். தாமினியின் திறமையை பார்த்து ஒரு தயாரிப்பு பார்ட்டி மடங்கிவிட்டார்.அவர் எடுக்கும் காதலானதே என்ற படத்தில் நடிக்க சான்ஸ் அடித்துவிட்டது தாமினிக்கு. ஆனால், ஹீரோயின் சான்ஸ் இல்லை.ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லி, பெரிய அளவில் துட்டும் கொடுத்துள்ளார்கள். ஒரு பாட்டுக்கு இது அதிகமான காசு தான்என்றாலும், அவரது ஒத்துழைப்புக்கும் மரியாதை செய்திருக்கிறார்கள்.சாத்துக்குடி.. சாத்துக்குடி..சம்மர் ஸ்பெஷல் சாத்துக்குடி..மாத்தி மாத்தி பிழிஞ்சு குடி (இதற்கு மேல் பாட்டில் உள்ள விரசம்.. மகா கேவலம்.. அதனால் இத்தோடு போதும்) என்று போகும்அந்த குத்து பாட்டுக்கு கமுக்கு ஆட்டம் போட்டுவிட்டு வந்துள்ளார் தாமினி.தமிழ் தெரியாது என்பதால் சொன்ன மாதிரி உடலை ஆட்டிவிட்டு வந்துவிட்டார். ஆனால், இன்னொரு படத்தில் ஒத்தைபாட்டுக்கு தங்களது ஹீரோயின் ஆடினார் என்று தெரிந்தவுடன் கடுப்பாகிவிட்டதாம் பேரரசு பட யூனிட்.மேலும் அந்த சாத்துக்குடி பாடலும் அதன் அர்த்தமும் தெரியவந்தபோது கொதிப்பு மேலும் அதிகமாகிவிட்டதாம்.யார் இந்த பாட்டுக்கு உங்களை ஆடச் சொன்னது என்று தாமினியை வாட்டி எடுத்துவிட்டார்களாம். கேப்டனுக்கும் தாமினி மீதுசெம கடுப்பாம். ஆனால், படத்தில் தாமினியின் சீன்கள் பாதிக்குப் பாதி எடுக்கப்பட்டுவிட்டதால், படத்தை விட்டு அவரைதூக்காமல் விட்டார்களாம்.இந் நிலையில் அந்தப் பாடலின் சில சீன்களை முடிக்க வரச் சொல்லி தாமினிக்கு தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்காதலானதே தயாரிப்பாளர். ஆனால், கேப்டனுக்கு பயந்து தாமினி அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் பதுங்கி வருகிறாராம்.இதனால் பாடலை எடிட் செய்து முடிக்க முடியாத இக்கட்டான சூழலில் இருக்கிறார்களாம் காதலானதே யூனிட்.இந்தப் படம் முடிந்தவுடன் அடுத்து பாலாவின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் விஜய்காந்த்.கூடவே கமுக்கமாக தனது தனது சொந்த கம்பெனியின் சார்பிலும் ஒரு புதிய படத்திற்கு பூஜை போட உள்ளாராம். அதைகுஷ்புவின் வூட்டுக்காரர் சுந்தர்.சி இயக்குவாராம். அரசியல் பிரவேசத்திற்கு முன் அதிரடி படமாக இது இருக்குமாம்.
விஜய்காந்த் நடித்து வரும் பேரரசு படத்தில் அவருக்கு ஜோடி சேருகிறார் தாமினி.
விஜய்காந்துக்கு மகள் மாதிரி இருந்தாலும், எனக்கு அது வேணும் என்று கேப்டன் ஆர்டர் போட்டு புக் செய்யப்பட்ட ஹீரோயின்.புளோரா, லயா போன்ற முத்திய பார்ட்டிகளுடனும், நமிதா, சூசன் போன்ற துள்ளும் இளமை குட்டிகளுடன் மாறி மாறி ஜோடிபோடுவது கேப்டனின் சமீபகால வாடிக்கையாக உள்ளது.
இந்த வரிசையில் இப்போது கேப்டனின் ஹீரோயினாகியிருக்கும் தாமினி, ஒரு மும்பை பிகர்.
ஒரு பக்கம் அரசியல் ஆட்டத்துக்குத் தயாராகிக் கொண்டே, தாமினியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்விஜய்காந்த். படத்தைத் தயாரிப்பது ரோஜா கம்பைன்ஸ் காஜாமொய்தீன். இவர் தான் கமல்- கெளதமை வைத்து வேட்டையாடுவிளையாடு படத்தையும் எடுத்து வருகிறார்.
"பேரரசு ஒரு ஆக்ஷன் சப்ஜெக்ட். சிபிஐ அதிகாரியாக வந்து தப்பு செய்கிறவர்களை தேடிப் பிடித்து அரை மணி நேரம் லியாகத்அலிகான் வசனம் பேசி டார்ச்சர் செய்துவிட்டு, பின்னர் அடித்து உதைக்கும் வழக்கமான விஜய்காந்த் பார்முலா படம் தான்.
படத்தின் ஆக்ஷனுடன் இளமையையும் வழிய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேலை தாமினிக்கு. அதை நன்றாகவேசெய்கிறாராம் தாம்ஸ்.
விஜய்காந்த் படத்தில் ஹீரோயினுக்கு அதிக வேலை இருக்காது என்பதால், எப்போதாவது கூப்பிட்டு அவரை ஆடச்சொல்கிறார்கள். அப்புறம் கூப்பிடும்போது வரணும் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.
தாமினியால் வீட்டில் சும்மா இருக்க முடியுமோ?.. அப்படியே சினிமா கம்பெனிகளில் படி ஏறிக் கொண்டிருக்கிறார். வாய்ப்புக்கேட்டுத்தான். தாமினியின் திறமையை பார்த்து ஒரு தயாரிப்பு பார்ட்டி மடங்கிவிட்டார்.
அவர் எடுக்கும் காதலானதே என்ற படத்தில் நடிக்க சான்ஸ் அடித்துவிட்டது தாமினிக்கு. ஆனால், ஹீரோயின் சான்ஸ் இல்லை.ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லி, பெரிய அளவில் துட்டும் கொடுத்துள்ளார்கள். ஒரு பாட்டுக்கு இது அதிகமான காசு தான்என்றாலும், அவரது ஒத்துழைப்புக்கும் மரியாதை செய்திருக்கிறார்கள்.
சாத்துக்குடி.. சாத்துக்குடி..
சம்மர் ஸ்பெஷல் சாத்துக்குடி..
மாத்தி மாத்தி பிழிஞ்சு குடி (இதற்கு மேல் பாட்டில் உள்ள விரசம்.. மகா கேவலம்.. அதனால் இத்தோடு போதும்) என்று போகும்அந்த குத்து பாட்டுக்கு கமுக்கு ஆட்டம் போட்டுவிட்டு வந்துள்ளார் தாமினி.
தமிழ் தெரியாது என்பதால் சொன்ன மாதிரி உடலை ஆட்டிவிட்டு வந்துவிட்டார். ஆனால், இன்னொரு படத்தில் ஒத்தைபாட்டுக்கு தங்களது ஹீரோயின் ஆடினார் என்று தெரிந்தவுடன் கடுப்பாகிவிட்டதாம் பேரரசு பட யூனிட்.
மேலும் அந்த சாத்துக்குடி பாடலும் அதன் அர்த்தமும் தெரியவந்தபோது கொதிப்பு மேலும் அதிகமாகிவிட்டதாம்.
யார் இந்த பாட்டுக்கு உங்களை ஆடச் சொன்னது என்று தாமினியை வாட்டி எடுத்துவிட்டார்களாம். கேப்டனுக்கும் தாமினி மீதுசெம கடுப்பாம். ஆனால், படத்தில் தாமினியின் சீன்கள் பாதிக்குப் பாதி எடுக்கப்பட்டுவிட்டதால், படத்தை விட்டு அவரைதூக்காமல் விட்டார்களாம்.
இந் நிலையில் அந்தப் பாடலின் சில சீன்களை முடிக்க வரச் சொல்லி தாமினிக்கு தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்காதலானதே தயாரிப்பாளர். ஆனால், கேப்டனுக்கு பயந்து தாமினி அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் பதுங்கி வருகிறாராம்.
இதனால் பாடலை எடிட் செய்து முடிக்க முடியாத இக்கட்டான சூழலில் இருக்கிறார்களாம் காதலானதே யூனிட்.
இந்தப் படம் முடிந்தவுடன் அடுத்து பாலாவின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் விஜய்காந்த்.
கூடவே கமுக்கமாக தனது தனது சொந்த கம்பெனியின் சார்பிலும் ஒரு புதிய படத்திற்கு பூஜை போட உள்ளாராம். அதைகுஷ்புவின் வூட்டுக்காரர் சுந்தர்.சி இயக்குவாராம். அரசியல் பிரவேசத்திற்கு முன் அதிரடி படமாக இது இருக்குமாம்.