Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்!
தாடி இயக்குநரின் வீட்டு வாசலில் கடன்காரர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை : தாடி டாடி தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நாளில், வீட்டு வாசலில் கடன்காரர்கள் சிலர் பணத்தைத் திருப்பிக் கேட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் தாடி டாடி இயக்குநர். இன்றைய இளைஞர்களின் காதலைச் சொல்லும் வகையில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை தனது வீட்டிலேயே நடத்தினார் இயக்குநர். அப்போது ஒருவர் வீட்டு வாசலில் கூச்சலிட்டதால், செய்தியாளர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.
விசாரணையில், சத்தமிட்ட நபர் இயக்குநருக்கு கடன் கொடுத்து ஏமாந்தவராம். இயக்குநரின் சர்ச்சை மகன் முன்னாள் காதலியுடன் நடித்த படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட போது, இவர்கள் தான் பணம் கொடுத்து உதவியதாகக் கூறப்படுகிறது.
தற்போது செய்தியாளர்கள் சந்திப்பை தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கொண்டு, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு அவர்கள் சத்தமிட்டதாகத் தெரிகிறது.