விவிஐபி கேட்ட கண்ணழகி நடிகை.. லேடி ஹிட்லரை காப்பாற்ற பலிகாடான நடிகை!

By Staff

சென்னை: பொதுவாக பெண்கள் என்றாலே சமூகத்தின் பார்வையிலும், ஆண்களின் பார்வையிலும் வேறு மாதிரித்தான் இருக்கும். அதுவும் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளுக்கு பலவகையில் பிரச்சனைகள் வரும், அப்படி பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, சினிமாவில் ஜெயிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி பல பிரச்சனைகளை சந்தித்தவர் தான் திம்ஸ்கட்டை நடிகை.

அண்டை மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அந்த திம்ஸ்கட்டை நடிகை. இவர் நடித்த முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து, வி எழுத்து நடிகர், விரல் நடிகர், வெளிச்சம் நடிகர் என பல வெற்றிப்பெற்ற நடிகருடன் நடித்து, தமிழ் சினிமாவில் டாப் நடிகை ஆனார். தொடர்ந்து பல படத்தில் பிஸியாக நடித்து பெயர் எடுத்த அந்த நடிகையும் வெளிச்சம் நடிகரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசு பொருளானதை அடுத்து, வெளிச்சம் நடிகரின் குடும்ப நலம் விரும்பி தயாரிப்பாளர் ஒருவர், வெளிச்சம் நடிகரின் அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்லி உள்ளார்.

tamil cinema Dhims Kattai actress Gossip

திம்ஸ்கட்டை நடிகை: இதையடுத்து மகனை அழைத்து, நமக்கு நடிப்பு என்பது தொழிலாக இருக்கலாம் ஆனால், நடிகையை திருமணம் செய்து கொண்டால் குடும்ப வாழ்க்கை சரியாக இருக்காது என்று கூறியுள்ளார். ஆனால், திம்ஸ்கட்டை நடிகை மீது காதல் கொண்டதால், அந்த வெளிச்சம் நடிகர் கட்டுனா அவளைத்தான் கட்டுவேன் என்று அடம் பிடித்துக்கொண்டு இருந்தார்.

சட்ட சிக்கல்லில் லேடி ஹிட்லர்: இந்த நேரத்தில் தான் அந்த, தமிழ்நாட்டின் லேடி ஹிட்லருக்கு சட்ட சிக்கல் ஒன்று வர, அவர் அதில் சிக்கி எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தார். அப்போது விவிஐபி ஒருவர், நான் உங்களை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறேன், அதற்கு பதிலாக எனக்கு பணம், பதவி வேண்டாம். எனக்கு அந்த திம்ஸ்கட்டை நடிகை வேண்டும் என்று கேட்டுள்ளார்.

பலிகாடான நடிகை: இதையடுத்து, லேடி ஹிட்லர், திம்ஸ்கட்டை நடிகையை அழைத்து பேச அவரோ, தான் ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நடக்கும் இந்த நேரத்தில், இதை என்னால் செய்ய முடியாது என்று சொல்ல, அந்த லேடி ஹிட்லர், இதற்கு மட்டும் ஓகே சொல்லவில்லை என்றால் தமிழ் நாட்டிலேயே வாழ முடியாது என்று சொல்லி மிரட்ட, பயந்து போன அந்த நடிகை விவிஐபியை மகிழ்விக்க ஓகே சொல்லிவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த விவிஐபி கேட்டுக்கொண்டதன் பேரில் ரயிலில் கூபே புக் செய்யப்பட்டு சென்னை டூ கன்னியாகுமரி, கன்னியாகுமரி டூ சென்னை ரயிலில் அந்த விவிஐபியுடன் பயணம் செய்துள்ளார். தற்போது அந்த திம்ஸ்கட்டை நடிகை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X