மசாலா சாதத்தை ரம்ஜானுக்கு பரிமாற விரும்பும் தயாரிப்பு, மறுக்கும் இயக்கம்
சென்னை: பாசத்திற்குரிய தம்பி நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் படம் 'வாசனை சாதம்'. படத்தின் பெயருக்கு ஏற்றார் போல், வரும் ரம்ஜானுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக்கினால் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும் என தயாரிப்பு தரப்பு சொல்கிறதாம்.
ஆனால், சென்னை கிரிக்கெட் இயக்குநரோ மெத்தனமாக செயல் படுகிறாராம். விளக்கம் கேட்டால், 'பொறுமை கடலினும் பெரிது' என குரல்வளை தெறிக்க குறள் சொல்கிறாராம். இதனால், தயாரிப்பு தரப்பில் இயக்குநர் மீது கொஞ்சம் அதிகமாகவே ஆவேசத்தில் உள்ளனராம்.
சாருக்கு, ஹீரோவின் அடுத்த படமும் தயார் என்பது மறந்து விட்டது போல என முணுமுணுக்கிறார்களாம் தயாரிப்பில்...


Click it and Unblock the Notifications











