பேர் சொல்லலையே... கவிஞரை மாற்றிய இயக்குநர்!
இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் வைரமான தமிழ் கவிஞர் சிறந்த பாடலாசிரியர் விருது வாங்கினார்.
அவர் விருது பெறக் காரணமாக இருந்த படத்தை இயக்கியது பெரியாரின் இயற்பெயரைக் கொண்ட இயக்குநர். இவர்கள் காம்பினேஷனில் ஏற்கனவே ஒரு பாடல் தேசிய விருது பெற்றிருந்தது.

விருது 'வாங்கிய' குஷியில் கவிஞர் தான் அளித்த பேட்டிகளில் எல்லாம் இயக்குநர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். தெரியாமல் விட்டாரா? வேண்டுமென்றே விட்டாரா? என்ற பஞ்சாயத்துக்கே இயக்குநர் போகவில்லை. கடுப்பாகி தனது அடுத்த படத்துக்கு வேறு ஒரு கவிஞரை ஃபிக்ஸ் பண்ணி விட்டாராம்.
பாடலாசிரியருக்கு வார்த்தைகள் முக்கியம் கவிஞரே...!


Click it and Unblock the Notifications











