தொடர்ந்து சிக்கல்கள்... கும்பகோணம் கோவிலில் பூஜை பண்ணிய பூ கணவர்
தொடர்ந்து ஹிட்களைக் கொடுத்து வந்த பூ கணவர் எப்போது சண்டக்கோழி நடிகருடன் சேர்ந்தாரோ அதில் இருந்தே அடிகள் தான்...
ஹனி காட் நிறுவனத்துக்காக ஒரு பிரம்மாண்ட படம் எடுக்கத் திட்டமிட்டார். அது கிட்டத்தட்ட ட்ராப் ஆகிவிட்டது. ஒளிப்பதிவாளர் கூட காத்திருந்து பார்த்துவிட்டு ஓடிவிட்டார்.
சீரியல் பிக்கப் ஆகும் நேரத்தில் திருட்டுக் கதை என்று சர்ச்சை வந்துவிட்டது. கதைக்கு உண்மையான சொந்தக்காரர் மனைவி பிள்ளைகளோடு பழனி கோயிலில் சத்தியம் பண்ணப் போவதாக கிலி கொடுத்திருக்கிறார்.
மனைவியும் அரசியலில் இருந்து காணாமலேயே போய்விட்டார். தொடர்ந்து சிக்கல்களாகவே வந்துகொண்டிருப்பதாலும் தயாரிப்பாளர் சங்கதேர்தலில் ஜெயிப்பதற்காகவும் கும்பகோணம் அருகில் இருக்கும் ஒரு கோவிலில் ஸ்பெஷல் பூஜை செய்துவிட்டு திரும்பியிருக்கிறாராம்.
இந்த பூஜையாவது அவரைக் காப்பாற்றுகிறதா என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











