திருட்டுத்தனமா படத்தை வெளியிடாதீங்க: கெஞ்சும் அருவா இயக்குனர்
சென்னை: படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அருவா இயக்குனர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிச்ச நடிகரை வைத்து அருவா இயக்குனர் எடுத்துள்ள படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்திலேயே அதை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது.

படத்தை வெளியிட்டால் அந்த இணையதள ஆட்களை கம்பி எண்ண வைப்பேன் என்று படத்தின் பச்சை தயாரிப்பாளர் சவால் விட்டுள்ளார். சவாலை ஏற்றுக் கொண்டு படத்தை வெளியிட்டே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது அந்த இணையதளம்.
இந்நிலையில் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அருவா இயக்குனர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்குமாறு ரசிகர்களை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
படத்தை விமர்சிப்பவர்கள் அதை தியேட்டரில் பார்த்துவிட்டு விமர்சிப்பது நல்லது என்கிறார் அருவா இயக்குனர்.


Click it and Unblock the Notifications










