ஆனை நடிகைக்கு கதவை அடைத்த இயக்குநர்!
ஆனை படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையானவர் அந்த மங்களகரமான நடிகை. நடிகைக்கு இப்போது மார்க்கெட் இல்லை. 'பொது பொது'வென என்று உடல் எடை ஏறியதும், மேக்கப் இல்லாமல் பயமுறுத்துவது போல் தெரிவதாலும் ஏற்பட்ட மாற்றம் இது.
ஆனை பட இயக்குநர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த படத்தில் எப்படியாவது சான்ஸ் வாங்கிவிட வேண்டும் என்று முயன்றார் நடிகை. ஆனால் இயக்குநர் மனதில் புதுமுகத்தை அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது.
எனவே நடிகையின் வேண்டுகோளை மறுத்துவிட்டாராம். நடிகை கையில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது. உடலைக் குறைத்தால்தான் திரும்ப நடிக்கவே முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். கொஞ்சம் சந்தோஷ லாகிரிகளைக் குறைச்சிக்கம்மா என முணுமுணுக்கிறது அம்மணியை வைத்து இயக்கியவர்கள் வட்டாரம்!


Click it and Unblock the Notifications











