ஹீரோ கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா? காத்திருக்கும் இயக்குநர்!
ஜெயமான ஹீரோ நடித்த காட்டு படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் பிரஸ்மீட்டில் பேசும்போது ஹீரோ இந்த படம் ஓடாவிட்டால் இதே இயக்குநருக்கு தான் ஒரு படம் நடித்துக் கொடுப்பேன் என்று வாக்கு தந்தார்.
ஹீரோ சொன்ன நேரமோ என்னவோ தெரியவில்லை. படம் ரிலீஸ் ஆகும்போது ஜிஎஸ்டி பிரச்னையால் தியேட்டர்கள் காற்று வாங்கின. படம் தோல்வியில் முடிந்தது. ஹீரோ சொன்னபடி படம் தருவாரா என்று காத்திருக்கிறாராம் இயக்குநர்.

இது ஜிஎஸ்டியால் ஏற்பட்ட தோல்வி. நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? என்று சுற்றிலும் இருப்பவர்களிடம் நியாயம் கேட்டு வருகிறாராம் ஹீரோ.


Click it and Unblock the Notifications











