'நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை'... அலறும் நடிகை!
இயக்குநரிடம் இருந்து விவாகரத்து வாங்கிய நடிகை மீண்டும் நடிப்புக்கு வந்தார். ஒல்லி நடிகருடனான படம் தவிர இப்போது திருட்டுப் படம் மட்டும் தான் தமிழில் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் மலையாளம், தெலுங்கில் நிறைய படங்கள் இருக்கின்றன. தமிழில் ஏன் படம் கிடைக்கவில்லை? என்பதற்கான காரணம் இப்போதுதான் நடிகைக்கு விளங்கியுள்ளது.

ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை என்ற தகவலால் மற்ற ஹீரோக்கள், இயக்குநர்கள் தன்னை சீண்டுவதில்லை என்ற உண்மைதான் அது.
எனவே தெரிந்த வட்டத்தில் இருக்கும் திரை நண்பர்களிடம் 'நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சுதந்திரமாகத்தான் இருக்கிறேன்' என்று சொல்லி வருகிறார். அதனைக் காட்டும் வகையில் பிற நடிகர்கள், இயக்குநர்களின் பார்ட்டிகளில் அடிக்கடி கலந்துகொள்கிறாராம்!
Comments


Click it and Unblock the Notifications