அந்த ஹீரோயின் மேல பெரிய கண்ணா வச்ச இயக்குநர்.. இனிமேல் அவங்க நிலைமை என்னாக போகுதோ?
சென்னை: இளம் ஹீரோயின் மீது அந்த சைக்கோ இயக்குநர் ஒரு கண் வைத்து விட்டார் என்றும் அடிக்கடி ஹீரோயின் உடன் அதிக நேரத்தை செலவழித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், அந்த இயக்குநர் சமீப காலமாக புதிதாக அறிமுகப்படுத்திய இளம் ஹீரோயினோடு தான் டைம் பாஸ் செய்து வருகிறார் என்கின்றனர்.
வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் என்பதால் அவர் கூப்பிடும் இடங்களுக்கு எல்லாம் அந்த நடிகையும் சென்று வருகிறார் என பகீர் கிளப்புகின்றனர். இந்த பஞ்சாயத்து கோடம்பாக்கத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பாமல் இருந்தால் சரி என கோடம்பாக்கத்தில் ஒரு க்ரூப் பேசத் தொடங்கியிருக்கிறது.

இயக்குநரின் செயல் அந்த படத்தில் நடித்து வரும் ஹீரோவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றும் அரசல் புரசலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இளம் நடிகையுடன் இயக்குநர் டேட்டிங்: ஏற்கனவே அந்த இயக்குநர் இயக்கிய படத்தில் ஹீரோயின்களுக்கு அவர் கொடுத்த டார்ச்சர் காரணமாக தெறித்து ஓடி விட்டனர். இந்நிலையில், கடைசியாக கிடைத்த ஹீரோயினை வைத்து படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், ஆரம்பத்தில் அந்த நடிகைக்கு நடிக்க வராத நிலையில், அடிக்க ஆரம்பித்து விட்டாராம் அந்த இயக்குநர். ஆனால், அதன் பின்னர் இயக்குநரிடம் தனிமையில் நடிகை தனது கஷ்டங்களை எடுத்து சொல்ல, அவருக்கு அந்த நடிகையை ரொம்பவே பிடித்துப் போய் விட்டதாக கூறுகின்றனர்.
பக்குவமா சொல்லிக் கொடுத்தார்: சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அதன் பின்னர் அந்த நடிகைக்கு பக்குவமாக அடிக்காமலும் உதைக்காமலும் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை பார்த்து படக்குழுவே ஷாக் ஆகி விட்டதாம். இதற்கு முன்னதாக இயக்குநர் இப்படி சாஃப்ட் டைப்பாக இருந்து பார்த்ததே இல்லையே என உதவி இயக்குநர்களே புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
படம் முடிந்தும் விடாத பந்தம்: மொத்த படமே முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையிலும், அந்த இளம் நடிகையை விடாமல், டப்பிங் பேச வேண்டும் என்றும் மாண்டேஜ் எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் சில இடங்களுக்கு அழைக்க நடிகையும் இயக்குநருடன் சென்று வருவதாக கூறுகின்றனர். ஹீரோவையே கண்டுக்கொள்ளாமல் நடிகையை வைத்து அப்படி தனியா என்னத்தான் அந்த இயக்குநர் செய்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள ஆட்களை அனுப்பிய ஹீரோவுக்கு கிடைத்த தகவல்கள் கடுப்பை கிளப்பி இருப்பதாகவும் படம் முதலில் வெளியாக வேண்டும் என்பதால் எந்த பிரச்சனையும் செய்துக் கொள்ளாமல் அமைதியாகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











