ராஜபக்சே மகனின் பாக்கெட்டை உரசும் தமிழ் நடிகையின் போட்டோ?

கோலிவுட்டில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கையில் நான் பாலிவுட் போகிறேன் என்று மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பையில் செட்டிலானார் அந்த நடிகை. இந்தி படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக இலங்கை சென்ற அவர் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் புகழ்பாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இலங்கை சென்றிருந்தபோது ராஜபக்சேவின் மகனுடன் நெருக்கமாக இருந்த சிடி தமிழகத்தில் உள்ள சில முக்கியப் புள்ளிகளிடம் கிடைத்துள்ளது என்று செய்திகள் வெளியாகின.
நடிகை இலங்கையை விட்டு வந்து பாலிவுட்டில் நிலைத்து நிற்க போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இன்னும் அந்த நடிகையின் போட்டோவை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











