நண்பரின் மனைவி மீது மீண்டும் மோகம்.. சேட்டையை ஆரம்பித்த நடிகர்.. தினமும் கச்சேரிதானாம்
சென்னை: கோலிவுட்டில் இப்போதைய தலைமுறை ஹீரோக்களில் டாப் இடத்தில் இருப்பவர் அந்த நடிகர். வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துவரும் அவர் இப்போது தேசிய விருது வென்ற இயக்குநரின் இயக்கத்தில் நடித்துவருகிறார். பெண்கள் தொடர்பான கிசுகிசுக்களில் சிக்காமல் தப்பித்துவந்த நடிகர் கடந்த வருடத்தில் தனக்கு நெருக்கமானவரின் மனைவியுடன் கிசுகிசுவில் சிக்கினார். இப்போது அந்தப் பெண்ணுடனான பழக்கம் மீண்டும் மெத்தைவரை செல்ல ஆரம்பித்திருக்கிறதாம்.
இந்த நடிகரின் வளர்ச்சியை தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அதனை ஜீரணிக்க முடியாமல்தான் அவருக்கு எதிராக ஒருதரப்பினர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடிகரோ தான் நடிக்கவந்தபோது இவர்களையெல்லாம் எப்படி அமைதியாக கடந்து சென்றாரோ அதேபோல்தான் இப்போதும் நடந்துகொள்கிறார். அவரது இந்த அணுகுமுறை எதிர் தரப்பில் இருப்பவர்களை மேற்கொண்டு பதற்றமடைய செய்கிறது.
வரிசையாக ஹிட்டுகள்: இப்போது காணாமல் போய்விடுவார், அந்தப் படம்தான் கடைசி இந்தப் படம்தான் கடைசி என்று இஷ்டத்துக்கு குரல்கள் வந்துகொண்டிருந்தாலும் அவர் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே செல்கிறார். அவர் சமீபத்தில் நடித்த நான்கு படங்களுமே வரிசையாக சூப்பர் ஹிட் என்ற ரிசல்ட்டையே பெற்றிருக்கின்றன. இப்போதுகூட பெரிய இயக்குநரின் இயக்கத்தில் நடித்துவரும் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்றே நம்பப்படுகிறது.

நோ கிசுகிசு: கரியரின் ஆரம்பகாலத்தில் தான் உண்டு தனது வேலையுண்டு என்றுதான் இருந்தார். ஆனால் அவர் வளர வளர அவரை சுற்றி பிரச்னைகளும் வளர்ந்தன. இதனால் சில மேடைகளில் ஓபனாகவே கண்ணீர் விட்டு அழவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று அவருக்கு புரிந்துவிட்டதால் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டார். ஆனாலும் ஒரு விஷயம் அவரது பெயரை ரொம்பவே டேமேஜ் செய்தது.
என்ன விஷயம்: அதாவது மூன்றெழுத்து பிரபலம் ஒருவர் இவருக்கு ரொம்பவே நெருக்கமானவர். சொல்லப்போனால் சினிமாவில் இவர் வளர்வதற்கு அவரும் ஒரு காரணம். இசையால் உச்சத்துக்கு கொண்டு சென்றார். அவரது மனைவிக்கும் இந்த நடிகருக்கும் பழக்கம் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவருக்கும் இருந்த நெருக்கத்தை தெரிந்துகொண்டுதான் மனைவியையே பிரிந்தார் அந்த பிரபலம். அவர் போனாலும் நடிகருடன் அன்யோன்யமாக இருந்த அந்தப் பெண்ணுடன் திடீரென பழக்கத்தை நிறுத்தினார்.
மீண்டும் மோகம்: இந்நிலையில் மீண்டும் அந்தப் பெண் மீதான மோகம் நடிகருக்கு வந்துவிட்டதாம். கடந்த வாரத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபோது பழைய நிலைமைக்கு சென்றுவிட்டார்களாம். அன்றிலிருந்து தினமும் அந்தப் பெண்ணுடன் அனைத்தையும் பகிர்வதை வாடிக்கையாக்கி இருக்கிறாராம். பணத்தையும் அள்ளி இறைக்கிறாராம். அநேகமாக இப்போதைக்கு அந்த மோகம் தீராது என்றே பேசுகிறார்கள். இது எப்போது மீண்டும் வெளியே வருமோ என்று கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











