மாஸ் நடிகரின் ரசிகர்களின் செயல்களைப் பார்த்து முகம் சுழிக்கும் திரை உலகம்.. அவரே அடக்கி வெக்கலாம்லனு ஆதங்கம்
சென்னை: தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்து வரும் செயல்கள், திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக புதிய கிசுகிசு ஒன்று பரவி வருகிறது. குறிப்பாக போட்டி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம், அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினர் வரை இழுத்து மிகவும் தரக்குறைவான பதிவுகளை வெளியிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு படத்தின் வசூல், விமர்சனம் அல்லது ரசிகர்களின் வரவேற்பு குறித்து கருத்து சொல்வது ஒரு விஷயம். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள், தோற்றம், வயது, உடலமைப்பு என எதையும் விட்டுவைக்காமல் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, மீம்ஸ் உருவாக்குவது, டிரெண்ட் செய்வது போன்ற செயல்கள் எல்லை மீறி வருவதாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் தனிப்பட்ட முறையில் ஆதங்கம் தெரிவித்து வருவதாக பேசப்படுகிறது.

படக்குழுவினருக்கும் மன உளைச்சல்: ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பே அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கதாநாயகி, குணச்சித்திர நடிகர்கள் என அனைவரையும் குறிவைத்து இணையத்தில் தாக்குதல் நடத்தப்படுவது, அந்தப் படக்குழுவினருக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. "படத்தை விமர்சிக்கலாம்; ஆனால் ஒரு மனிதரை ஏன் அவமதிக்க வேண்டும்?" என்ற கேள்வி திரையுலகில் அடிக்கடி எழுந்து வருகிறதாம்.
ஒரே ஒரு வார்த்தை சொன்னா போதுமே: இதையெல்லாம் விட பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது, அந்த மாஸ் நடிகர் இதுகுறித்து இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காததுதான். "யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காதீர்கள்", "சினிமாவை சினிமாவாகவே பாருங்கள்", "என் பெயரை சொல்லி யாரையும் அவமதிக்க வேண்டாம்" என்று அவர் ஒரு முறை கூறினாலே, ரசிகர்களில் ஒரு பெரிய பகுதி அதை மதிப்பார்கள் என்று திரையுலகினர் நம்புகிறார்களாம்.
அமைதியே சம்மதமா? ஆனால், ரசிகர்கள் செய்யும் இணையவழி தாக்குதல்கள் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகும் போதும், நடிகர் தரப்பில் இருந்து எந்த கண்டனமும் வராததால், "இந்த அமைதி எதற்காக?", "ரசிகர்கள் செய்வதை ரசித்துக் கொண்டிருக்கிறாரா?", "அல்லது அவர்களை கட்டுப்படுத்த விருப்பம் இல்லையா?" என்ற கேள்விகளும் திரையுலக வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர் அல்லது அவரது தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. ஆனால், ரசிகர்களின் இணையவழி கலாச்சாரம் குறித்து திரையுலகில் அதிகரித்து வரும் அதிருப்தி மட்டும் நாளுக்கு நாள் வெளிப்படையாக தெரிந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications