மீண்டும் பெரிய திரைக்கு திரும்புகிறார் பூ நடிகை... 5 படங்கள் தயாரிக்கிறார்!

அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கும் பூ நடிகை, மீண்டும் பெரிய திரையில் களமிறங்க முடிவு செய்துள்ளாராம். ஆனால், நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக.

அதிரடியாக ஐந்து படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகை. அதில் ஒன்று மட்டும் கணவரின் இயக்கத்தில் உருவாகிறதாம். மற்ற படங்களை வேறு சில இயக்குநர்கள் இயக்குகிறார்களாம்.

அதில் ஒரு படத்தில் புதிய கராத்தேவைக் கண்டு பிடித்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்களாம். இந்தப் படம் மட்டும் அதிக பட்ஜெட்டில் தயாராகிறதாம். மற்ற படங்கள் குறைந்த முதலீட்டுப் படங்கள் தானாம்.

இவ்வாறு நடிகை அரசியலில் இருந்து தனது கவனத்தை சினிமா பக்கம் திருப்பியதில் மிஸஸ் நாட்டாமைக்குத் தான் சந்தோஷம் ஜாஸ்தி. ஏனெனில் தங்களுக்குப் போட்டியாக இலையில் வந்து பூ இணைந்து விடுமோ என பயத்தில் இருந்தவர் அவர் தானே.

நடிகை தற்போதைக்கு படத் தயாரிப்பு வேலைகளில் மட்டும் தன் முழுக் கவனத்தையும் செலுத்துவார் என்றும், அரசியல் மறுபிரவேசம் குறித்து ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பார் என்றும் அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X