மீண்டும் நடிக்கத் துடிக்கும் நடிகை: தடை போட்ட குடும்பத் தலைவர்
சென்னை: சிங்கத்தின் மனைவிக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆனால் அவரது ஆசைக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சிங்கத்தின் மனைவி குழந்தைகளோடு பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் தான் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்களே நாம் மீண்டும் நடிக்கத் துவங்கினால் என்ன என்று நினைத்தார். இதை தனது கணவரிடமும் கூறினார். காதல் கணவரான சிங்கம் ஓகே தாராளமாக நடிப்பை தொடரலாம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
ஆனால் குடும்பத் தலைவரான சிங்கத்தின் தந்தை மருமகளின் ஆசைக்கு தடை போட்டுவிட்டாராம். நான் இருக்கும் வரையில் குடும்பம் கட்டுக்கோப்பாக இப்படித் தான் இருக்க வேண்டும். அதன் பிறகு எப்படி வேண்டும் என்றாலும் இருங்கள் என்று பட்டென்று கூறிவிட்டாராம்.
அதனால் அம்மணி நடிப்பது குறித்து பேசாமல் வாய் மூடிக் கொண்டிருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications