Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மடியில் படுத்து.. அந்த இரவை மறக்க முடியல.. கம்பி நீட்டும் இயக்குநரை நடிகை துரத்த இதான் காரணமாம்!
சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை அந்த இயக்குநரை விடாமல் விரட்டி விரட்டி காதலிப்பதன் காரணம் வெளியாகியுள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் அந்த நடிகை. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய பிரபலங்கள் மீது பலான குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்தார்.
அதோடு முக்கிய பிரபலங்கள் பலர் மீதும் அதிர குற்றச்சாட்டுக்களை கூறி மிரள விட்டார். இதனால் அவரது பெயரைக் கேட்டாலே பிரலபங்கள் மிரளுகின்றனர்.
இயக்குநருடன்..
நடிகை சினிமா வாய்ப்புக்காக ஏற்கனவே பலருடன் படுக்கையை பகிர்ந்து இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் பிரபலமானார். சிறிய அறிமுக நடிகர்கள் முதல் பெரிய ஜாம்பவான்கள் வரை பலரும் நடிகையை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் படம் என்றாலும் கருத்து என்றாலும் ஏழரையை கூட்டும் ஒரு இயக்குநரும் நடிகையிடம் நெருங்கி பழகி பயன்படுத்திக் கொண்டாராம்.
மடியில் படுத்து
நெருங்கி பழகியதோடு மட்டுமின்றி நடிகையை மானே தேனே மயிலே குயிலே என புகழ்ந்தும் தள்ளியிருக்கிறார். இதனால் சொக்கிப் போன நடிகை, இயக்குநரின் பேச்சையெல்லாம் கேட்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரை நடிகை விளாசியது கூட இயக்குநரின் பேச்சைக் கேட்டுதான் என்று கூறப்படுகிறது. பாலிவுட் வரை பிரபலமான அந்த இயக்குநர் தனது மடியில் படுத்து கொஞ்சியதை பெரும் பாக்கியமாக கருதினார் நடிகை.
உருகி உருகி காதல்
இந்நிலையில் தான் நடிகையை கழட்டிவிட்டு கம்பி நீட்டியிருக்கிறார் இயக்குநர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகை நொந்து போயிருக்கிறாராம். எப்படியாவது இயக்குநரை மீண்டும் தன்பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால் தான் உருகி உருகி தனது காதலை வெளிப்படுத்தி வருகிறாராம் நடிகை.
கட்டிய கணவர் இருக்க
ஏற்கனவே மறைந்த நடிகையின் கல்லறையில் இடம் கேட்டு சர்ச்சைக்கு ஆளானவர் அந்த இயக்குநர். அதோடு அந்த நடிகையை தீவிரமாக காதலித்ததாகவும் கூறிய அவர், அந்த நடிகைக்காகதான் சினிமாவுக்கே வந்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். கட்டிய கணவர் குத்துக் கல்லாட்டம் இருக்க, தான் இறந்த பிறகு அந்த நடிகையின் கல்லறையின் அருகிலேயே தனது உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றார்.
என்னவோ நடக்குது..
இந்நிலையில் இந்த சர்ச்சை நடிகை, அந்த சர்ச்சை இயக்குநருக்காக ஏங்கி தவிக்கிறார். அதற்காகதான் அந்த இயக்குநரை நேரடியாக படுக்கைக்கு அழைத்தாராம் நடிகை. ஆனால் இயக்குநரோ இதுதொடர்பான கேள்விகளுக்கு கூட நேரடியாக பதிலளிக்காமல் இருந்து வருகிறார் இயக்குநர். என்னன்னவோ நடக்குது அதுல இதுவும் ஒன்று..!