Don't Miss!
- News மோடி பேரணியின்போது மாணவர்கள் சீருடையுடன் நின்ற விவகாரம்.. பள்ளிக்கே சென்ற டீம்.. அதிரடி ஆக்ஷன்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சமத்து நடிகை.. கடுப்பில் புகுந்த வீடு.. என்னவாக போகுதோ!
சென்னை: பெரிய குடும்பத்து மருமகளான அந்த நடிகை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது புகுந்த வீட்டை கடுப்பாக்கியுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் அந்த சமத்து நடிகை. தொடர்ந்து அக்கட தேசத்து சினிமாவிலும் கோலிவுட்டிலும் கொடி கட்டி பறக்கிறார்.
”ரெஜினாவுக்கு ஓகேன்னா.. எனக்கு ஒகே” பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் 'கசட தபற’ பேட்டி!
அங்கேயும் சரி இங்கேயும் சரி டாப் நடிகர்களுடன்தான் ஜோடி போட்டு வருகிறார் அம்மணி. சம்பளம் பெத்த தொகையாகதான வசூல் செய்து வருகிறார்.
மார்க்கெட் டாப் கியரில்
வயதுக்கு மீறிய கதாப்பாத்திரத்திலும் நடித்து கல்லாக்கட்டி வருகிறார் நடிகை. சமீபத்தில் பெரிய வீட்டு மருமகளான அந்த நடிகைக்கு திருமணத்திற்கு பிறகுதான் மார்க்கெட் டாப் கியரில் செல்கிறது. நடிகை கமிட்டானாலே அந்த படம் ஹிட் என்றாகி விட்டது.
படுக்கையறை காட்சிகளில் எல்லாம் அசால்ட்
இதனாலேயே எப்படியாவது நடிகையை சம்மதிக்க வைத்து வருகின்றனர். படங்களில் கல்லாக்கட்டுவது போதாது என வலை நாடகங்களிலும் தடம் பதித்து விட்டார் நடிகை. சமீபத்தில் வெளியான வலை நாடகம் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் அசால்ட் காட்டினார் அம்மணி.
புதிய பிரச்சனையில் சிக்கிய நடிகை
அந்த காட்சிகள் எல்லாம் பெரும் சர்ச்சையான நிலையில் நடிகைக்கு எதிர்ப்புகள் எழுந்தன. அதற்காக மன்னிப்பு கேட்டார் நடிகை. அந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்றை கிளப்பியுள்ளார் அந்த பெரிய குடும்பத்து நடிகை.
பெரும் அதிர்ச்சியில் புகுந்து வீடு
அதாவது வலை நாடகம் ஒன்றில் ஒட்டு துணியில்லாமல் நடிக்கப்போகிறாராம் அந்த சமத்து நடிகை. இதனை கேட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சியடைந்த நிலையில் குடும்பத்தினரும் விழி பிதுங்கியுள்ளார்களாம். நடிகையின் இந்த முடிவால் கடுப்பில் உள்ள குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்களாம்.
கோபத்தில் புகுந்த வீடு
ஏற்கனவே நடிகை புகுந்த வீட்டு விசேஷங்களை புறக்கணித்து வருகிறார். குடும்ப நிகழ்ச்சிகள் பலவற்றில் அம்மணி அப்ஸ்காண்டாகி விடுகிறார். இதனாலேயே புகுந்த வீட்டினர் கடுப்பில் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஆடையில்லாமல் நடிப்பதாக வெளியான அறிவிப்பும் புகுந்த வீட்டினரை கோபப்படுத்தியுள்ளதாம்.
தாராளம் காட்டி காணாமல் போன நடிகை
ஏற்கனவே மில்க் நடிகை இப்படி தாராளம் காட்டியதால்தான் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். அதன் பிறகு ஒரு படத்தில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் திருமண உறவில் இருந்து கொண்டே சமத்து நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளதாம்.