சமத்து நடிகை கணவரை பிரிய காரணம் அந்த விசேஷமான நடிகைதானாமே.. வீட்டுக்குள் புகையும் பிரச்சனை!

சென்னை: சமத்து நடிகைக்கும் காதல் கணவருக்கும் பிரச்சனை வர காரணமாக இருப்பவர் அந்த விசேஷ நடிகைதான் என முனுமுனுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் அந்த டாப் நடிகை. அக்கட தேசம் இக்கட தேசம் என கலக்கி வருகிறார் நடிகை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அக்கட தேசத்ததை சினிமா குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டார் நடிகை.

வாரிசுடன் காதல் டேட்டிங்

வாரிசுடன் காதல் டேட்டிங்

பெரிய குடும்பத்து வாரிசை காதலித்தார் நடிகை. இருவரும் இணைந்து நடித்த முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி தாறு மாறாய் வொர்க்கவுட் ஆனது. இதனால் நடிகையும் நடிகரும் பல ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தனர்.

நடிகைக்கும் நடிகருக்கும் திருமணம்

நடிகைக்கும் நடிகருக்கும் திருமணம்

விவகாரம் ஊர் முழுக்க பரவ இரு வீட்டாரும் சேர்ந்து நடிகைக்கும் நடிகருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பலரும் பிரமிக்கும் வகையில் ஜேராய் நடந்து முடிந்தது திருமணம்.

எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணுவதில்லை

எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணுவதில்லை

திருமணத்திற்கு பிறகு தான் நடிகையின் மார்க்கெட் உச்சத்திற்கு போனது. சம்பளத்தை கோடிகளில் உயர்த்திய நடிகை கிடைக்கும் எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணுவதில்லை. திருமணம் ஆனாலும் தொழில் முதலில் என என்ன நடந்தாலும் ஷூட்டிங்கிற்கு கிளம்பி விடுகிறார் நடிகை.

படுக்கையறை காட்சிகளிலும் தூள்

படுக்கையறை காட்சிகளிலும் தூள்

இதனாலேயே குடும்பத்தினர் கடுப்பில் இருந்தார்களாம். இந்நிலையில் படங்களில் தாராளம் காட்டும் நடிகை படுக்கையறை காட்சிகளிலும் பட்டையை கிளப்புகிறார். அதோடு அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் நடிகை.

குடும்பத்தை விட்டு விலகுவார்

குடும்பத்தை விட்டு விலகுவார்

இந்நிலையில் சமத்து நடிகை ஆடையில்லாமல் நடிக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு புகுந்த வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் நடிகை வெகு விரைவில் பெரிய குடும்பத்தை விட்டு விலகுவார் என்றும் கூறப்பட்டது.

நடிகைதான் கணவர் நடிகர் மீது கோபம்

நடிகைதான் கணவர் நடிகர் மீது கோபம்

இந்த நேரத்தில் தான் சமத்து நடிகை கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து இருப்பதாக செய்தி பரவியது. கணவர் குடும்பத்தினர் கோபத்தினால் தான் நடிகை பிரிந்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் புதுக் கதையாக நடிகைதான் கணவர் நடிகர் மீதுள்ள கோபத்தில் பிரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

விமர்சித்த விசேஷமான நடிகை

விமர்சித்த விசேஷமான நடிகை

கணவர் நடிகருக்கும் அவருடன் 3 படங்களில் நடித்துள்ள விசேஷமான நடிகைக்கும் இடையேயான உறவுதான் சமத்து நடிகை கோபத்திற்கு காரணமாம். விசேஷமான நடிகை தன்னை விமர்சித்து போஸ்ட் ஷேர் செய்த போதும் காதல் கணவர் அதை கண்டு கொள்ளவில்லை என கோபத்தில் இருக்கிறாராம் நடிகை.

நடிகருக்கு அந்த நடிகையுடன் நெருக்கம்

நடிகருக்கு அந்த நடிகையுடன் நெருக்கம்

அதோடு நடிகரும் விசேஷமான நடிகையுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் சமத்து நடிகை காதல் கணவரை பிரியும் முடிவில் உள்ளார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் சமத்து நடிகை , அவரது காதல் கணவர் மற்றும் அந்த விசேஷமான நடிகை குறித்துதான் பேச்சாக உள்ளது.

யாரையும் மதிக்காமல் பேச்சு

யாரையும் மதிக்காமல் பேச்சு

அந்த விசேஷமான நடிகை பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போதுதான் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதோடு இந்தியிலும் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ளார் அந்த விசேஷமான நடிகை. இதனால் மற்ற நடிகைகளை மதிக்காமல் தன்பாட்டுக்கு பேசி வருகிறாராம் அந்த நடிகை.

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X